Tuesday, May 30, 2006

153: கணித்திருவிழையாடல்.

இது வரை நான் நகைசுவைபதிவை பதித்தில்லை முதல் முறையாக ஒரு நகைச்சுவை பதிவு தொடர்.
கணித்திருவிழையாடல்.
(சிரிப்பதற்க்கு மட்டும்)


இடம்: மக்கள் கூடும் சந்தை

முரசு அறிவிப்பவன் யானை மீதிருந்து முரசு அறிவிக்கிறான்...

டும்... டும்... டும்...

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!!!!!!!

நமது பாண்டிய மன்னருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்ககூடிய C program கொண்டு வரும் ப்ரோகிராமருக்கு 1000 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப்படும்

டும்... டும்... டும்...
தருமி கூட்டத்தை விலக்கி கொண்டு முன் வருகிறான்
தருமி: (முரசு அறிவிப்பவனை பார்த்து) எவ்ளோ? 1000 அமெரிக்க டாலரா?
முரசு அறிவிப்பவன் : ஆமாம்.... ஆயிரம் அமெரிக்க டாலர்கள்
தருமி ஆவலை கட்டுபடுத்த முடியாமல், தனக்கு தானே பேச ஆரம்பிக்கிறான் ஆய்யோ ஒன்னா ரெண்டா ஆயிரம் டாலராச்சே, ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நான் என்ன பண்ணுவேன்.இப்போன்னு பார்த்து program எழுத வரலை ... அப்பா சொக்கா!!!! சிவன் தருமியின் முன் தோன்றுகிறார். அவரை பார்த்தால் system programmer போல் இருக்கிறார்.
சிவன்:புரோகிரமரே...
தருமி: யாரது?
சிவன்: அழைத்தது நான் தான்.
தருமி: அப்படியா? ஏன் அழைச்சீங்க?
சிவன்:மன்னரின் அய்யப்பாட்டை நீக்கும் உனக்கு கிடைத்தால் பரிசு அத்தனையும் உனக்கே கிடைத்துவிடுமல்லவா?
தருமி: ஆமாம், ஆமாம்
சிவன்: நான் அந்த ப்ரோகிராமை தருகிறேன்
தருமி: யாரு யாரு ... நீ
சிவன்: ஆம்
தருமி: அத கொண்டு போய் என் ப்ரோகிராம்னு சொல்லவா. எதோ Y2K BUG எல்லாம் solve மன்னிகிட்டு இருக்கேன், ப்ரோகிராம்ன்னு ஒத்துகிட்டு இருக்காங்க, அதையும் கெடுக்கலாமுன்னு பாக்கிறியா?
சிவன்: பரவாயில்லை எடுத்துச் செல்.
தருமி: அப்ப திருடலாம்ன்னு சொல்றியா?
சிவன்: ஹா ஹா ஹா ஹா
தருமி: தெய்வீக சிரிப்பையா உங்களுக்கு,
சிவன்: என் திறமைமீது சந்தேகமிருந்தால், நீ வேண்டுமானால் என்னை பரிசோதித்து பாரேன்... உனக்கு திறமை இருந்தால்
தருமி: தருமிக்கு கோபம் வருகிறது. யாரு... ஏங் எங்கிட்டேவா, எங்கிட்டேவா, மோத பாக்கிறியா, நான் ஆளு பார்க்க தான் சுமாரா இருப்பேன். ஆனா என் ப்ரோகிறாமை பற்றி உனக்கு தெரியாது... தயாரா.... இரு....
சிவன்: அப்படியே. கேள்விகளை நீகேட்கிறாயா நான் கேட்கட்டுமா?
தருமி: (நடுக்கத்துடன்) ஆ.. நானே கேட்கிறேன். எனக்கு கேட்க தான் தெரியும்...

(தொடரும்...)

3 comments:

Prabu Raja said...

இது ஏற்கனவே எல்லோருக்கும் இ-மெயிலில் வந்து விட்டது.

சிவமுருகன் said...

உண்மை தான் ராஜா எனக்கும் இ-மெயிலில் தான் வந்தது ஆனால் படமாக வந்தது அதை தட்டி பதித்துள்ளேன்.

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.

சிவமுருகன் said...

யோகன் சார்,

நகைச்சுவையை அங்கிருந்தே அரம்பித்து விட்டேன்

அவ்வளவே!

வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி.