முருகா ஏனப்பா உனக்கு என் மீது விரோதமா
அல்லது பறவைகள் மீது பரிதாபமா?
-நானோ விவசாயின் -நண்பன்
புழுவுக்கு அடுத்த படியாய்,
அப்போது தான் அவன் உனக்கு
படியளப்பான் படிப்படியாய்
பறவைகளை உன்னவிடுவதில்லை
என குற்றம் சாட்டுகிறாயே !
அறுவடையான நெல்லை
நான்
காவல் காப்பதில்லையே !
அது உனக்கு விளங்கவில்லையே!
ஆரம்பத்தில் சிதறிகிடப்பதை இந்த
சின்ன சிறகுகள் உண்டுவிட்டால்
கதறிகிடக்கும் அதன் குஞ்சுகளும்
அதனோடு உன் பிஞ்சுகளும் !
Friday, January 08, 2010
Subscribe to:
Posts (Atom)