Monday, April 30, 2007

சித்திரை திருவிழா:

சித்திரை திருவிழா

கடந்த வருடம் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழாவை தினந்தோறும் பதிவில் பதித்து வந்தேன். மிக கடினமான அலுவல் காரணமாக என்னால் இவ்வருடம் தொகுக்க முடியாமல் போனது.

ஒவ்வொரு நாளும் அம்மையும் அப்பனும் பல பல வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தனர். ஆறாம் நாள் காலையில் பிக்ஷாடனார் கோலத்தில் வலம் வந்து தன் திருமணத்திற்க்கு நிதி சேர்த்த வைபவமும். நேற்று காலை திருமணமும், இரவு புஷ்ப்ப பல்லாக்கும், இன்று காலை தேர்திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெற்றது.


துல்லியமான படங்கள் தினமலரில், சுட்டி இதோ சித்திரை திருவிழா:

Tuesday, April 17, 2007

அஃறிணை அழகுகளும் மறந்து விட்ட படிப்பினைகளும்

முதல் முதலில் ஒரு பதிவரின் குரலை கேட்டது என்றால் அது நம்ம கண்ணபிரான் இரவிசங்கர் தான். அப்பேற்பட்டவர், பதிவு பதிக்க அழைக்கிறார் அதுவும் அழகு பற்றிய தொடராக.

யாராவது பதிவு பதிக்க கூப்பிட்டா சட்டுன்னு சரின்னு சொல்லாம இப்படி பதிக்கவா? அப்படி பதிக்கவா? ன்னு கருத்து கணிப்பும், செல்லாத ஓட்டு போடக்கூடாதுன்னு திஸ்கி வேற. கடைசியா சரியான மாதிரி நான் மாட்ட இதோ ஒரு பதிவு மாட்டிகிச்சு.

அஃறிணை அழகுகளும் மறந்து விட்ட படிப்பினைகளும்.

ஆவினங்கள்
தன் கன்றோடு தன் எஜமானன் குழந்தைகளையும் காக்கும் ஆவினங்கள் அழகு.
மனித(ம்)ன் மறந்தது: பிரதியுபகாரம் காணாமல் செய்யும் நன்றி.

ஆலமர விதை
சிவப்பாய் - சிறியதாய் பிறந்த ஆலமர பழத்தினுள்ளே இருக்கும் ஆலவிதை அழகு
மனித(ம்)ன் மறந்தது: சிறிதாய் பிறப்பது குற்றமல்ல, சிறிதாய் மரிப்பது.

ஆலமர விழுது
ஏன்றோ வளர ஆரம்பித்து ஏன்றோ தரையை தொட ஊஞ்சலாடும் ஆல விழுது அழகு
மனித(ம்)ன் மறந்தது: பொருமையோடு வளர்ச்சியும் இருக்க வேண்டியதன் அவசியம்

தலையாட்டி பொம்மை
சிரிக்க வைத்து கவனத்தை ஈர்க்கும் தலையாட்டி பொம்மை அழகு
மனித(ம்)ன் மறந்தது:எல்லாவற்றையும் ஏற்க்கும் மனதும், சமநோக்கையும்

மெழுவர்த்தி
தன்னையே கரைத்து வேலையை செய்யும் மெழுவர்த்தி அழகு.
மனித(ம்)ன் மறந்தது:இருளை துடைக்க ஒண்டியாய் போராடும் மனப்பாண்மை

மரப்பெட்டி
தன்னுள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து தேவைப்படும் போது தரும் மரப்பெட்டி அழகு
மனித(ம்)ன் மறந்தது: தேவையில் தரும் சேவை.
நான் அழைப்பது : ஒன்னு இல்ல ரெண்டு பிரதீப். ("மழை" பிரதீப்பும், "காற்றில் பறக்கும் காகிதம்" பிரதீப்பும்).