Wednesday, April 26, 2006

105: பிறந்த நாளில் திகைக்க வைததவர்களுக்கு

சரி ஒரு பேச்சுக்கு பிறந்தநாளை நம் பதிவில் போடுவோம் என்று நினைத்து பதித்தால். எங்கெங்கோ இருந்து வாழ்த்துக்கள் வந்து குவிந்தது. என் கூகிள் மின்னஞ்சல் பெட்டியில் இருபத்தைந்து அஞ்சல் வந்தது இதுவே முதல் முறை.

வாழ்த்தின் உச்சம், யாரோ ஒரு ப்ரேம் என்ற நன்பர் ஒருவர் தான்சானிய நாட்டிலுருந்து வாழ்த்து SMS அனுப்பியதும், உடன் அலுவலர் ஒருவர் வேலைபாடு மிகுந்த ஒரு Cotton Shirt பரிசளித்தது.

ஆக வாழ்தியவர்களுக்கும், வாழ்த்துபவர்களுக்கும், வாழ்த்த இருப்பவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.

Saturday, April 22, 2006

100: நூறாவது பதிவும் மற்றும் நாலு பதிவும்

‘நாலு’ பதிவை நானும் பதிய வேண்டும் என்று பல நாட்கள் நினைத்து தகவல்களை இன்று பதிக்கிறேன்.

I. நான் அனைவரையும் வணங்கினாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட சமயத்தில் (கிழமையோ, திதியோ, தினமோ) வணங்கும் கலியுகத்தில் பிறந்து பல சாதனைகளை செய்த-செய்து வருகிற ஆன்மீக பெரியவர்கள் நால்வர்.

1. ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள்





2. ஸ்ரீ ராகவேந்திரர்




3. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா



4. சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ்

II. என் கண்ணியில் உள்ள நான்கு தொடுப்புகள்
1. தினமலர்
2. தமிழ்மணம்
3. சைவம்.ஆர்க்
4. கூகிள் தேடல்

III. பிடித்த நான்கு பறவைகள்
1. புறா
2. கிளி
3. சிட்டுக்குருவி
4. ராஜாளி

IV. பிடித்த நான்கு வீட்டு விலங்குகள்
1. பசு
2. நாய்
3. பூனை
4. காளை

V. பிடித்த நான்கு வலை தளங்கள்
1. ஈ-பேப்பர்-தினமலர்
2. சைவம் வினாவிடை
3. தேசிகன் வீடு
4. துளசிதளம்

VI. நெஞ்சில் நிற்க்கும் நான்கு பதிவாளர்கள்
1. குமரன்
2. ஞானவெட்டியான்
3. பிரதீப்
4. தருமி

VII. சமீபத்தில் கவர்ந்த பதிவாளர்கள்
1. ச.திருமலை
2. மோகன்தாஸ்
3. சிபி
4. இராகவன்


VIII. மனம் (அக)மகிழ்ந்த நாலு தருணங்கள்
1. தில்லி வந்த நாள், (04-06-2002).
2. வேலை மாற்றிய நாள் (30-06-2003).
3. கருமுத்து கண்ணன் அவர்களின் மின்மடல் கண்ட நாள்..
4. தினமலரில் என் பதிவை கண்ட நாள் (27-3-2006).

IX. பேசக் கற்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. ஹிந்தி

X. எழுத கற்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. மலையாளம்

XI. புரிகின்ற நான்கு மொழிகள்
1. சௌராஷ்ட்ரா
2. தமிழ்
3. ஆங்கிலம்
4. புன்னகை

XII. இந்தியாவில் சுற்றுலா செல்ல விரும்பும் நான்கு இடங்கள்.
1. உதகையும், கொடைக்கானல்
2. பெங்களூர்
3. ஹைதரபாத்
4. நைனித்தால்

XIII. பார்த்து அதிசயித்த நான்கு இடங்கள்.
1. மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை
2. அமேர் மகால் - ஜெய்பூர்
3. சத்தர்பூர் மந்திர் - தில்லி
4. இந்தியா கேட்- தில்லி

XIV. நான் என்னுள் தேடும் நான்கு கேள்விகளின் பதில்கள்!
1. நான் யார்?
2. நான் எங்கிருந்து வந்தேன்?
3. நான் எதற்க்காக பிறந்தேன்?
4. நான் எத்தனை நாட்கள் இருப்பேன்?

XV. மறக்க முடியாத நான்கு தினங்கள்
1. ஜூன், 7 - என் அம்மாவின் பிறந்தநாள்.
2. டிசம்பர், 11 - என் அப்பாவின் பிறந்தநாள்.
(பார்தீர்களா ஒற்றுமையை. 7/6ம், 11/12ம்.)
3. பிப்ரவரி 12 - நான் யோகா கற்றுணர்ந்த நாள்.
4. ஏப்ரல் - 23 - என்னுடைய பிறந்த நாள். (அட நாளைக்கா? மறக்க முடியுமா?)

Friday, April 21, 2006

87: சிவமுருகன்

"சிவமுருகன்" என்ற என் பெயரை புதிதாக சிலமொழிகளில் எழுத கற்றேன். அதையே ஒர் பதிவாக போட்டால் என்ன என்று யோசித்தேன். அதன் விளைவு இதோ

1. Tamil - சிவமுருகன்
2. English - Sivamurugan
3. Sourashtra - Mvb cgjgiZB
3. Hindi - शिवमुरुगन
4. Sanskrit - शिवमुरुगन्
5. Kanada - ಶಿವಮುರುಗನ್
6. Telugu - శివమురుగన్
7. Oriya - ଶିବ ମୁରୁଗନ
8. Gujarati - શિવ મુરુગન
9. malayalam - ശിവമുരുഗന്
10.Punjabi - ਸ਼ਿਵਮੁਰੁਗਨ
11. Bengali - সিৱমুরুগন

குறிப்பு: சௌரஷ்ட்ர மொழியில் பெயரை காண font தேவை font இங்கே உள்ளது.

Monday, April 17, 2006

86: ஆண்டியும் அரசனும் ...

குமரன் அவர்களின் பங்குனி உத்திரம் - 3 பதிவை கண்டு மிகவும் மகிழ்ந்திருந்த வேளையில், ஒரு இனம் புரியாத சிந்தனை தூண்டியது. ஆனால் எதுவும் பிடிபடவில்லை.

சாதாரனமாக வாரத்தில் 2-3 முறை 'மலை மந்திர்' என்றழைக்கபடும் பொன்னேரகபதியான உத்தர சுவாமி மலையோனை கண்டு தரிசிப்பது வழக்கம். அன்று மாலை அவரை தரிசிக்க 92 படிகளுடைய அந்த மலையேரும் பொழுது அந்த இனம் புரியாத சிந்தனையின் பொருள் கிடைத்தது.

"பழனி ஆண்டவனை ஆண்டி கோலத்தில் தரிசித்தவர்கள் 'ராஜ அலங்காரத்தில்' கண்ட பிறகே தங்களது திருஆவினங்குடி பயணத்தை முடிப்பர்".

நாம் ராஜ அலங்காரத்தை வலையில் பார்க்க வில்லையே என்று எண்ணியபடி உள்ளே சென்று பார்த்த போது. அங்கே அந்த சுவாமிநாதன் "யாரங்கே சிவமுருகனின் சிந்தனையை பூர்த்திசெய்" என்பது போல் வேல், வாள், தண்டம் முதலிய 'அஸ்திரம்' ஏந்தி, மகுடம், பட்டு, பீதாம்பரம் தரித்து, சந்தனம்,ஜவ்வாது, பன்னீர், விபூதி பூசி, ரோஜா, மல்லி என்று மலர் பல சூடி ராஜ அலங்காரத்தில் நின்றருளினார். என்னால் பேச முடியவில்லை, பாட முடியவில்லை, குறைந்தது கந்த சஷ்டி கவசத்திலிருந்து "காக்க காக்க கனகவேல் காக்க" என்று வரும் 4 அடிகளை சொல்வதும் அன்றய தினம் முடியவில்லை.

இதைதான் "உன்னை பார்த்தெந்தன் தாய் மொழி மறந்தேன்" என்பதோ?

மணதில் உள்ளதை தாயறிவாள், கண்ணில் உள்ளதை மனைவி அறிவாள், தூரத்தில் உள்ளதை மக்களறிவர். இப்படி எல்லோருக்கும் அறிவிக்கும் முருகா எனக்கும் அப்படிதான் அறிவித்தாயோ?

இதோ முருகனின் ராஜ அலங்காரம்.

Wednesday, April 05, 2006

54: இராம நவமி சிறப்பு பதிவு


வணக்கம்.
இராமரை பற்றி நான் எதுவும் புதிதாக சொல்ல போவதில்லை.

மதுரையில் மகால் 5வது தெருவில் உள்ள அனுமார் கோவில் என்று அழக்கப்படும் 'ஸ்ரீ சீதாராமாஞ்சனேய கொவிலில்' என் குடும்பத்தினர், ஒவ்வொரு ராமநவமிக்கும் அவல் பாயாசம் செய்து வினியோகம் செய்வதை வழக்கமாக் கொண்டுள்ளுனர். அதை இன்றும் தொடர்வதற்க்கு எமக்கு வாய்ப்பளிக்கும் இராமரையும், அவர்தம் படை, பரிவாரத்தையும் வணங்கி மகிழ்கிறேன்.



பலரும் அறிந்த ராமரை பற்றிய ஒரு பாடலை படிக்க நேர்ந்தது, கவிஞர் கண்ணதாசனின் ‘லட்சுமி கல்யாணம்’ திரைபடத்தில் இடம்பெற்ற பாடல். பாட இனிமையாகவும், கருத்துடனும் இருக்கும் என்னை கவர்ந்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.


'யாம் பெற்ற இன்பம் பெருக இப்பதிவகம்'.

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜாராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

தாயே என்தெய்வம் என்ற கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெயராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
ராமன் எத்தனை ராமனடி

வம்சத்திற் கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ச்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்தராமன்
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்?
ராமஜயம் ஸ்ரீராமஜயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!

ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்
ராம் ராம் ராம் ராம்

மேலும் ஒரு பாடல் சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் வந்த பாடல், நான் முதலில் ஒரு பாடலை முழுவதும் பாட கற்ற பாடல் இந்த பாடல்.

ராமன் கதை கேளுங்கள் ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்
அலங்காரச் சீதை அரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்

வசனம்: சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை.....
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க.....
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தி கண்ணெடுத்து பார்க்க மாட்டாரோ...
என்று கவலை கொண்டனர்களாம்....
சீதா தேவியின் செல்லத் தோழிகள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
மதயானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்....
தோளிருமலைதனை தூக்கிய வீரர்கள் வந்தார்
இடிகளை கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்...
ஆகா நடந்தாள் சீதை நடந்தாள்....
விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்.....
வரவு கண்டு அவள் அழகு கண்டு சிவதணுசு
நாணும் வீணை போல அதிர்ந்தது
ராமன் கதை கேளுங்கள்
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல் அது ஒடிபட விழுந்தார்
சிலர் எழுந்தார்
தொடைதட்டி எழுந்தவர் முட்டி தெறித்துவிட
சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இருகையும் நோக..... தம் தோளது நோகவே அழுதார் சிலர் இடுப்பை பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்....
ஆஹா வீரம் இல்லையா....
வில்லை ஒடிக்க ஆண்கள் யாருமில்லையா.....

ராமாய ராபத்ராய் ராமசந்த்ராய நமஹ

தசரதராமன் தான் தாவி வந்தான்
சிவதனுசை ஒரு கண்ணால் பார்த்திருந்தான்
சீதையை மறுகண்ணால் பார்த்திருந்தார்
மறுநொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தார்....
பட பட பட பட பட பட பட பட ஒலியுடன் முறிந்தது சிவதணுசு
ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய ஜெய ராமா ஜெய ஜெய ராமா....
தசர ராமா ஜனகன் மாமா.....
சீதா கல்யாண வைபோகமே

ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
காணக்கண் அழகாகுமே.....
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே....
ஸ்ரீராமா அதோ பாரப்பா
அழகான சீதை விழி அரசாளும் கோதை
விழி கண்டி குடி கொண்டு மணமாலை தந்த (ராமன்)