Sunday, August 14, 2016

மதுரை காந்தி

மதுரையை சேர்ந்தவர்களுக்கு இவரை பற்றிய எந்த அறிமுகமும் தேவையில்லை.

அறியாதவர்களுக்காக இவர் மதுரையின் முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர். மதுரை காந்தி என்றழைக்கப்பட்ட 'என்.எம்.ஆர்.சுப்பராமன்'.

இவரை பற்றிய சாதனைகளை சொல்ல தனி வலைபூவையே தொடங்க வேண்டும் அத்தனை அரிய விஷயங்களை இவர் செய்துள்ளார். இவரை பற்றிய நூல் 'மதுரை காந்தி' என்ற பெயரில் வெளிவந்துள்ளது.


"என்.எம்.ஆர்.எஸ்." என்றால் மதுரையை சுற்றியுள்ள பல கிராமத்து மக்களின் முகம் மலர்ந்து விடும். முக்கியமாக ஹரிஜன மக்கள் உடனே தேசியகீதத்திற்க்கு எழுந்து நிற்பது போல் எழுந்து நின்றுவிடுவர். அப்பேற்ப்பட்ட மக்களின் அன்பிற்க்கும், மரியாதைக்கும் உரியவர் என்.எம்.ஆர்.எஸ். என்ற என்.எம்.ஆர். சுப்பராமன். இவர் பெயரில் ஒரு கிரமம் என்.எம்.ஆர். சுப்பராமன்புரம் என்ற பெயரில் மதுரை கருப்பாயூரணிக்கும், விளத்தூருக்கும், அருகே உள்ளது! இவர் பூதானமாக தந்த பல விளைநிலங்கள் இன்றும் இரண்டு-மூன்று போகம் அளிப்பது அன்னாரும் அவர் தம் பெரியோர்களும் செய்த நல்வினைப்பயன்கள்.


ஒரு மதுரை எம்.பி.க்கு ஒரு தபால் தலை வெளியிடப்பட்டது என்றால் அது இவருக்கு என்று தான் எண்ணுகிறேன்.