Friday, July 10, 2015

ஸௌராஷ்ட்ரர் # 4

ஸௌராஷ்ட்ரா தேசம்
சௌராஷ்ட்ரா தேசம் இதிகாச புராணங்களில் கூறப்படும் பாரத நாட்டின் 56 தேசங்களில் சௌராட்டிர தேசமும் ஒன்றாகும். . இத்தேசம், தற்போதைய குசராத்து மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகள், வடக்கே கட்சு வளைகுடாவும், தெற்கே காம்பே வளைகுடாவும், மேற்கே அரபியன் கடலும், கிழக்கே தற்போதைய குசராத்து மாநிலத்தின் இதர பகுதிகளால் சூழப்பட்டது. சௌராஷ்ட்ரதேசத்தின் நிலப்பரப்பு முக்கடல்களால் சூழப்பட்டதால் இதனை கத்தியவார் தீபகற்பம், என்பர்.
சௌராஷ்டிர தேச நிலப்பரப்பில் தற்போது இன்றைய குசராத்து மாநிலத்தின், ராஜ்கோட் மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், அம்ரேலி மாவட்டம், பவநகர் மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம், தேவபூமிதுவாரகை மாவட்டம் மற்றும் கிர்சோம்நாத் மாவட்டம் ஆகிய ஒன்பது மாவட்டங்கள் அடங்கியுள்ளது.
இச் சௌராட்டிர தேசத்தில் தான் 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையான சோமநாதபுரம் ஆலயம் மற்றும் துவாரகை கோயிலும், கிர்னார் சமணர் கோயில்களும், கிர் தேசியப் பூங்காவும் அமைந்துள்ளது.
பண்டைய சௌராஷ்ட்ரதேசத்தின் நிலவியல் அமைப்பு :
பண்டைய காலத்தில் சௌராஷ்ட்ர நிலப்பரப்பு, ஆனர்ந்தா, லாட்டா (லாடதேசம்), சௌராஷ்ட்ர தேசம் என முப்பெரும் பிரிவுகளாக பிரிந்து இருந்தது. இக்கால வடக்கு குசராத்தின் பகுதி ’ஆனர்ந்தா’வாக இருந்தது. அதன் தலைநகர் இக்கால ஆனந்தபூர் எனபடும் ’ஆனந்த்’ (Anand). இக்காலத் தெற்கு குசராத்தில் மகீ ஆற்றுக்கும், தப்தி ஆற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு, முன்பு லாட்டா (லாடதேசம்) பகுதியாக விளங்கியது. இக்கால கத்தியவார் தீபகற்ப பகுதி சௌராட்டிர தேசம் எனப்பட்டது. இப்பெயர் இப்பகுதி மக்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் சௌராஷ்ட்ரதேசம் :
இதிகாச, புராணங்களில் கூறப்படும் 56 நாடுகளில் சௌராஷ்ட்டிரதேசமும் ஒன்று. அதர்வண வேதத்தில், சௌராஷ்ட்ர தேசம் பற்றிய குறிப்பில், லலிதா திருபுரசுந்தரியின் அம்சமான ’பகளாமுகி’ என்ற சக்தி தேவி சௌராஷ்ட்ர தேசத்தில், மஞ்சள் நிற நீரோடையில் தோண்றினாள் என்றும், பகளாமுகி தேவிக்கு ’பீதாம்பரீ’ என்ற பெயரும் உள்ளதாகவும் அறியப்படுகிறது.
’வஸ்திராபத க்ஷேத்ர மகாத்மியம்’ எனும் பண்டைய கால புரான நூலில் பிரபாச காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி: மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி, கயிலை மலையில் தவம் செய்து வந்த 64 ரிசிகளை, தாமேதரன் என்பவரின் தலைமையில் சௌராஷ்ட்ர தேசத்தில் உள்ள ரைவத மலைப்பகுதிக்கு (Girnar Hills) அழைத்து வந்தார். அங்கிருந்த தாமோதர சுவாமி கோயிலுக்குள் அவர்கள் நுழைந்தவுடன், அவர்களை அழைத்து வந்த தாமோதரன் மறைந்து விட்டாராம். அசரீயாக ஸ்ரீகிரிநாராயணர் (விஷ்ணு) அவர்களை, இந்த கிரிநாராயணர் கோயில் பகுதியில் தங்கி வாழும்படி கூறி, அவர்களுக்கு கிரிநாராயணர் வேதியர்கள் என்ற பெயர் சூட்டி ஆசிர்வதித்தார். அந்த பகுதியை ஆண்ட சந்திரகேது என்ற அரசன் அவர்களுக்கு 64 கன்னிகைகளை கன்னிகாதானம் செய்து கொடுத்து 64 கிராமங்களும் மற்றும் பொன், பொருட்கள் தானமாக வழங்கினார். இவர்கள் தங்களுக்குள் 64 கோத்திரங்களாக பிரிந்து வாழ்ந்தனர். சௌராட்டிரா தேசத்து வேதியர்கள், வேதகாலத்து 64 ரிஷி கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள்.
தசரதன் சௌராஷ்ட்ர தேசத்திற்கு வந்து, வேதியர்களுக்கு பாதுகாப்பும் கௌரவமும் செய்தார் என்று இராமாயணம் மூலம் தெரியவருகிறது. மேலும் மகாவிஷ்ணு, வாமன வடிவத்தில் சோமநாதபுரம் (குசராத்து) அருகில் ஒரு நகரை உண்டாக்கி, அதற்கு வாமன ஸ்தலம் என்று பெயரிட்டார். தைத்தியர்கள் (அசுரர்கள்) அந்நகரை கைப்பற்றிய பொழுது, தசரத மாமன்னர் வாமன தலத்தை மீட்டு, அங்கு வாழ்ந்த கிரிநாராயண சௌராஷ்ட்ர வேதியர்களுக்குக் கொடுத்தார். தசரத மாமன்னர் மீண்டும் சௌராஷ்ட்ர தேசத்திற்கு வந்து சௌராஷ்ட்ர தேச வேதியர்களைக் கொண்டு அசுவமேத யாகம் செய்தார். அதன் பலனாக அயோத்தியில், திருமாலின் எட்டாவது அவதாரமான ஸ்ரீஇராமர் அவதரித்தார்.
திருமாலின் ஒன்பதாவது அவதாராமான ஸ்ரீகிருஷ்ணர், மதுராவை விட்டு யாதவர்களுடன் வெளியேறி, சௌராஷ்ட்ர தேசத்தில் குடியேறி துவாரகை எனும் துவாரகபுரி கடற்கரை நகரை அமைத்து ஆட்சி புரிந்தார் என்பதையும், கண்ணபிரான் சோமநாதரை வழிபட்டு புருஷோத்தமன் என்ற உயர் பதவி அடைந்தார் என்றும், யது குலத்தவர்கள் முனிவரின் சாபத்தால் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு, யது குலம் அழிந்த பிறகு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சோமநாதபுரம் (குசராத்து) ஆலயம் அமைந்த பிரபாச பட்டினத்தில் இருந்து வைகுண்டம் எழுந்தருளினார் என்பதை பாகவத புராணம் மற்றும் மகாபாரதம் மூலம் அறியலாம். மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் துவாரகையில், உத்தவர் என்ற தன் பக்தருக்கு உத்தவ கீதை உபதேசித்து அருளினார் என்பதை பாகவத புராணம் வாயிலாக அறியலாம்.
சௌராஷ்ட்ரதேசம் பஞ்சரத்தினங்களுக்குப் புகழ் பெற்றது என்கிறது ஒரு சமசுகிருத சுலோகம். “சௌராஷ்ட்ரே பஞ்சரத்நானி நதி நாரி துரங்க மா: சதுர்த்த ஸோமநாதஷ்ச பஞ்சமம் ஹரிதர்ஷணம்”. இதன் பொருள் சௌராஷ்ட்ரதேசத்தில் நதிகள், மாதர்கள், குதிரைகள், சோமநாதர், துவாரகை கண்ணன் ஆகியவற்றை பஞ்ச ரத்தினங்கள் (ஐந்து சிறப்பம்சங்கள்) என்று குறிப்பிடுகிறது.
சௌராஷ்ட்ரதேசத்தில் உள்ள துவாரகையில் “ராஸ நிருத்தியம்” என்ற நாட்டியம் கண்ணபிரானால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த நாட்டியத்தை கண்ணனின் பேரனின் மனைவியான உஷாதேவிக்கு கற்பிக்கப்பட்டது. இவள் மூலமாக சௌராஷ்ட்ர தேச பெண்மணிகள் (ஒன்றாகக் கூடி ஆடும்) ராச நாட்டியத்தை கற்றுப் பரம்பரையாக இன்றும் ஆடி வருகின்றனர்.
சௌராஷ்ட்ரதேசம் இந்து, சமணம் மற்றும் பௌத்தம் சமயங்களை ஆதரித்து வந்துள்ளது. இங்கு இந்துக்களுக்கு அடுத்து அதிக அளவில் சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். சமணர்களும், சமணக் கோயில்களும் இங்கு தான் அதிகமாக உள்ளது.
சந்திரனால் சிவலிங்கம் நிறுவப்பட்ட சோமநாதபுர ஆலயத்தைச் சுற்றி உள்ள கோட்டைக்கு வெளியே உள்ள மயான பூமிகளில் சைவ சமய கபாலிகர்கள் சுதந்திரமாக சுற்றி திருந்தார்கள். கோட்டைக்கு உட்புறம் இருந்த திருபுரசுந்தரி ஆலயத்தில் சைவ சமய சாக்தர்கள் வழிபட்டனர்.
சௌராஷ்ட்ரதேசத்தில் உள்ள போர்பந்தர் எனும் நகரம் முன்பு சுதாமபுரி என்று அழைக்கப்பட்டது. சுதாமர், ஸ்ரீகிருஷ்ணரின் பள்ளி பருவத்து ஆருயிர் நண்பர். அவருடைய பெயரால் அமைந்த ஊர் சுதாமபுரி.
விசிஷ்டாத்துவைத சமய ஆச்சாரியரான இராமானுசர் மற்றும் துவைத சமய ஆச்சாரியரான மத்வர் ஆகியவர்கள், துவாரகை ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டனர். துவாரகை கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று. மகாராஷ்ட்ர மகான் ஞனேஸ்வரரும் துவாரகை இராஜகோபாலனை வழிபட்டார். கண்ணனின் காதலியான மீராபாய் மார்வாரிலிருந்து, கண்ணனை காண துவாரகை வந்து கண்ணனுடன் கலந்தார்.
பண்டைய வரலாற்றில் சௌராஷ்டிர தேசம் :
கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்கள் முதலிய வெளிநாட்டினர், இங்குள்ள வரலாற்று புகழ் மிக்க துறைமுகப்பட்டினங்கள் மூலம் வணிகம் செய்தனர். கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் சௌராஷ்ட்ர தேசத்தை வெற்றி கொண்ட ’மேனாண்ட்ரின்’ செயலைப் புகழும் ’ஸ்ட்ராபோ” என்பவர், இத்தேசத்தை “சரோஸ்டோஸ்’ என்று குறிப்பிடுகிறார்.
சோமநாதபுரம் சிவாலயத்தை நேரில் கண்ட அரேபிய வரலாற்று அறிஞர் அல்பிருணி (Albiruni) என்பவர், உலகப் புகழ்பெற்ற சோமநாதபுர சிவலிங்கத்திற்கு 750 மைல் தொலைவிலிருந்து கொண்டு வரப்படும் புனித கங்கை நீரால் நாள்தோறும் அபிஷேகம் செய்யப்பட்ட்தாக தன் வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய, சந்திர கிரகணங்களின் முடிவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சோமநாதபுரத்திற்கு இரண்டு மைல் தூரத்தில் உள்ள சரசுவதி ஆறு, ஹிரண்ய நதி மற்றும் கபில நதிகள் ஒன்று கூடும் திருவேணி சங்கமத்தில் புனித நீராடி சோமநாதரை வணங்கினர் என்றும், இக்கோயிலின் வருமானமும், செல்வமும் குவிந்த காணிக்கைகளும் கணக்கிட முடியாதது என்று, இசுலாமிய வரலாற்று அறிஞர் இபின் அசிர் வியக்கிறார்.
’பிரபாஸ சேத்திரம்’ , ‘ பிரபாஸ பட்டணம், ’தேவ பட்டணம்’ , மற்றும் ‘பட்டணம்’ என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இவ்விடத்தில் அமைந்துள்ள சோமநாதர் ஆலயம் எனும் சிவலிங்க கோயிலில் 2000 சௌராஷ்ட்ர தேச வேதியர்கள் வேதம் ஓதிக்கொண்டே இருந்தனர். இசையில் சிறந்த 300 கலைஞர்களும், 500 நாட்டியப் பெண்களும் (Daughters of Royal Houses of India) சிவபெருமானை எப்போதும் ஆடல் பாடல்களால் மகிழ்வூட்டினர். இக்கோயிலுக்கு 10,000 கிராமங்கள் மானியமாக பக்தர்கள் வழங்கி இருந்தனர். 300 முடிதிருத்தும் கலைஞர்கள் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை சிற்ப கலைஞர்கள் எவ்வித ஆதாரம் இன்றி அந்தரத்தில் அமைந்தபடி நிர்மாணித்திருந்தார்கள்.
ஆதிசங்கரர், பாரத தேசத்தின் மேற்கு பகுதியில்துவாரகை ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு ’துவாரகா மடம்’ என்ற அத்வைத மடத்தை நிறுவினார்.
சௌராஷ்ட்ரதேசத்தின் கட்ச் பகுதியில் 100 குடும்பங்கள் கொண்ட ‘பன்னி’ (Banni) என்ற கிராமம் உள்ளது. இது இந்தியாவின் எல்லையோர கிராமம் ஆகும். கால்நடைகள் வளர்த்தல், நெசவு நெய்தல், புடவைகளுக்கு பூ வேலைப்பாடுகள் செய்தல், புட்டா போடுதல் பன்னி கிராம மக்களின் தொழில். இவர்கள் சமயத்தால் இசுலாமியர் எனினும், புலால் உண்பது, மது அருந்துவது பாவம் என நினைப்பவர்கள். இவர்கள் மதம் மாறினாலும் தங்களின் பரம்பரை இந்து சமய உணவுப் பழக்க வழக்கங்களை இன்றும் பின்பற்றி வருகின்றனர்
சௌராட்டிரதேசத்திய மொழிகள் :
சௌராஷ்ட்ர தேசத்தை இசுலாமியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் மற்றும் சமணர்கள் சமசுகிருத மொழியின் பேச்சு மொழியான பிராகிருதமொழியின் கிளை மொழிகளான ‘சூரசேனி’ என்ற ’சௌரசேனி’ மொழியும், பெளத்தசமயத்தினர் பாலி மொழியையும் பேசினார்கள்.
இப்பகுதியை ஆண்ட இசுலாமிய மன்னர்கள் பேசிய பாரசீக மொழி, அரபு மொழி மற்றும் ஆப்கானிய மொழிகளின் தாக்கத்தின் காரணமாக , புதிதாக உருவான இந்தி மற்றும்உருது மொழி கலப்பு கொண்ட புதிய குசராத்தி மொழியை தற்போது இப்பகுதி மக்கள் பேசுகின்றனர்.
சௌராஷ்ட்ரதேசத்தை ஆண்ட மன்னர்கள் :
சௌராட்டிர தேசத்தை, மகத நாட்டு, நந்த குல, மெளரிய குல, குப்த குல, சுங்க குல, சக குல மன்னர்கள், யாதவ குல, கூர்சர பிரதிகர குல, மைத்திரக குல, சாளுக்கிய சோலாங்கி அரச குலம் மற்றும் வகேலா குல மன்னர்கள், தில்லி சுல்தான்களும், மொகலாயர்களும், இராச புத்திர வம்சத்தார்களும், சாளுக்கிய மன்னர்கள், சாதவாகனர்கள் மற்றும் மராத்திய மன்னர்களும் ஆண்டனர்.
கி.மு. 322ல் சந்திரகுப்த மௌரியர் ஆட்சியின் கீழ் சௌராஷ்ட்ர தேசம் மேற்கிந்தியப் பகுதியில் அடங்கி இருந்த்து. பேரரசர் சந்திரகுப்த மௌரியரின் மைத்துனரான புஷ்யமித்ர சுங்கன் சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். கி.மு. 155 வரை சுங்க வம்சம் சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்டனர்.
பின்னர் ‘ மேனாண்டர் ‘ (Medander) என்ற அன்னியர்கள் சௌராஷ்ட்ர தேசத்தை கைப்பற்றி சில காலம் ஆண்டனர்.
கி.மு. 72ல் சக வமிசத்தவர்கள் சௌராஷ்ட்ர தேசத்தை வென்று, சக அரச பரம்பரையை தோற்றுவித்தனர். இந்நாட்டை புமகன் முதல் சுவாமி ருத்ர சிங்கன் ஈறாக 26 சக வம்ச அரசர்கள் ஆண்டனர்.
பாரசீகர்கள் கி.பி.35 முதல் 405 வரை சௌராஷ்ட்டிர தேசத்தின் ஒரு பகுதியை ஆண்டனர்.
கி.பி. 126ல் ஆந்திரா நாட்டு நபான அரசன் சௌராஷ்ட்ரா தேசத்தை கைப்பற்றி ஆண்டனர்.
கி.பி. 145ல் ருத்ரதாமன் என்ற சௌராஷ்ட்ர தேசத்து மன்னன், ஆந்திர அரசனை வென்று, கி.பி. 390 வரை சௌராஷ்ட்ர தேசத்தை சுதந்திரமாக ஆண்டான்.
மகத நாட்டு மாமன்னர் இரண்டாவது சந்திர குப்த மௌரியர் என்ற (விக்கிரமாதித்தன்), சௌராஷ்ட்ர தேசத்தை வென்று, தனது மகனான குமார குப்தரை சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமித்தார்.
கி.பி. 413ல் ’குமார குப்தர்’ மகத நாட்டின் அரியணை ஏறி சௌராஷ்ட்ர தேசத்தை ஆண்டார். அவரது மறைவுக்குப் பின் ’ஸ்கந்த குப்தர்’ ஆட்சிக்காலத்தில், ’பர்ணதத்தன்’ என்பவர் சௌராஷ்ட்ர தேசத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின் ’சக்ரபலிதன்’ சௌராஷ்ட்ரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்.
கி.பி. 470க்குப்பின் ’மைத்ரக’ குடியைச் சேர்ந்த (Maitraka Clan) ’பட்டாரகன்’ என்னும் படைத்தலைவர் சௌராஷ்ட்ர நாட்டை வென்று, பட்டாரகன் முதல் சிலாதித்யன் முடிய இருபது அரசர்கள், 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இந்த அரச வம்சத்தை வல்லபிபுரம் வம்சம் என்பர். கி.பி. 766 வரை நீடித்த வலபீபுர வம்சம் முகமதியர்களின் படையெடுப்பால் அழிந்தது. சீன பௌத்த துறவியான யுவான் சுவாங் என்பவர், வலபீபுரத்தை பற்றி, நாலந்த பல்கலைக் கழகத்திற்கு நிகரான ’வலபீபுரம்’ திகழ்ந்தாக தமது குறிப்புகளில் குறித்துளார்.
கி.பி. முதல் நூற்றாண்டு முதல் சௌராஷ்ட்ர தேசத்தை மாளவ மற்றும் மராட்டிய ’சோலங்கி’, கொய்க்வாட்’ மற்றும் போன்சுலே அரசப்பரம்பரையினர், தில்லி சுல்தான்கள் சௌராஷ்ட்ரத்தின் மீது படையெடுத்து கைப்பற்றும் வரை ஆண்டனர்.
வெள்ளையர்கள் இந்தியாவை முழுமையாக கைப்பற்றும் வரை, சௌராஷ்ட்ர தேசம், டெல்லி சுல்தான்களின் ஆட்சியிலும், பின்னர் மொகலாயர்கள்ஆட்சிக்குட்பட்டும் இருந்தது.
ஆங்கிலேயர்கள் காலத்தில், ஆங்கிலேய அரசுக்கு கப்பம் கட்டும் 122 இந்து, இசுலாமிய பெருநில மன்னர்களும், குறுநிலமன்னர்களும் மற்றும் ஜமீந்தார்களும் பெரும்பாலான சௌராஷ்ட்டிர தேசத்தின் பகுதிகளை, சமஸ்தானங்கள் என்ற பெயரில் ஆண்டனர். அவைகளில் குறிப்பிடத்தக்க சமஸ்தானங்கள், பரோடா, ஜினாகாட், பவநகர், போர்பந்தர், ராஜ்கோட், ஜாம்நகர், கட்ச், காம்பே, சோட்டா உதய்பூர், மோர்வி, நவநகர், பாலன்பூர் ஆகும்.
சௌராட்டிரதேசத்தைப் பற்றிய வெளிநாட்டு அறிஞர்களின் கூற்று :
மார்கோ போலோ என்ற இத்தாலிய வணிகர், சௌராஷ்ட்டிர பகுதியில் வணிகம் செய்கையில், அப்பகுதியில் இருந்த இந்து யோகிகள் 100 முதல் 125 வயது வரை உயிர் வாழ்ந்தார்கள் என்று தனது பயணக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கசினி முகமது உடன் இந்தியா வந்த அரபு வரலாற்று ஆசிரியரும் கவியுமான ’அல்பரூணி’ என்பவரும், பாரசீக அறிஞரான இபின் அசிர் என்பவரும், சௌராஷ்ட்டிர தேசத்தில் உள்ள சோமநாதபுரம் (குசராத்து) கோயிலைப் பற்றியும், அதன் செல்வச் சிறப்புகள் பற்றியும் குறித்துள்ளார்.
யுவான் சுவாங் என்ற சீன பெளத்த துறவி சௌராஷ்ட்டிர தேசத்தில் இருந்த வலபீபுர கல்விச்சாலையை நாலந்தா பல்கலைக்கழகத்திற்குநிகராக உள்ளது என்று தமது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சௌராட்டிரதேசத்தை ஆண்ட மன்னர்கள் சிலர், வலிமையான ஆட்களை ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வந்து தங்கள் மெய்க்காவல் படையில் சேர்த்தார்கள். ஆப்பிரிக்கர்களின் குடியிருப்புகள் சௌராஷ்ட்ர தேசத்தில் பார்த்தாக வரலாற்று அறிஞர்கள் தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய விடுதலைக்குப் பின் சௌராஷ்ட்ர தேசம் :
ஜீனாகாட் சமஸ்தானத்தை ஆண்ட இசுலாமிய மன்னர், இந்திய விடுதலையின் போது, ஜீனாகாட் சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வெள்ளையரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஜீனாகாட் சமஸ்தானம் இந்தியாவில் இணைக்கப்பட்ட்து, ஜீனாகாட் சமசுதான மன்னர் பாகிஸ்தானில் குடும்பத்துடன் குடியேறினார். சுதந்திர இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் சர்தார் வல்லபாய் படேலின் பெருமுயற்சியால் 217 சமஸ்தானங்களைக் கொண்ட சௌராஷ்ட்ர தேசத்தை (Saurashtra Region), ‘ ஐக்கிய கத்தியவார் அரசு ’ (United State of Kathiyawar) என்ற பெயரில் 15.02.1948ல் உருவாக்கப்பட்ட்து. பின்னர் இதை பம்பாய் மாநிலத்துடன் 01.01.1956ல் இணைக்கப்பட்ட்து. 01.05..1960ல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கும் போது சௌராஷ்ட்ர தேசம் (United State of Kathiyavar) குசராத்து மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
சௌராஷ்ட்ர பகுதியில் உள்ள கோயில்கள், மடங்கள், மசூதிகள் மற்ற இடங்கள் :
ஜீனாகாட் மாவட்டத்தைப் பிரித்து 2012ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிர் சோம்நாத் மாவட்டதில், பிரபாச பட்டினத்தின் கடற்கரை ஒட்டி அமைந்துள்ள சோமநாதபுரம் கோயில். இது 12 ஜோதிர் இலிங்க கோயில்களின் ஒன்றாகும்.
ராஜ்கோட் அருகே உள்ள சாமுண்டா தேவி கோயில்.
ஆதிசங்கரர் பாரத நாட்டின் மேற்கு திசையில், சாம வேதத்திற்காக நிறுவிய காளிகா மடம் என்ற துவாரகைமடம், ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ளது.
பவநகர் மாவட்டம், பாலிதானம் என்ற ஊரில் சத்ருஜெயம் எனும் மலையில் அமைந்துள்ள தீர்த்தாங்கரர்களின் கோயில்.
ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள, துவாரகை, கிருஷ்ணன் கோயில் , (பண்டைய கோயில் மற்றும் நகரம் கடலில் மூழ்கிவிட்டது).
ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள பேட் துவாரகை கோயில்.
ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள நாகேஷ்வரர் கோயில் மற்றும் அனுமன் கோயில்.
ஜாம்நகர் மாவட்டத்தில் சமணர்களின் 16வது தீர்த்தாங்கரான சாந்திநாத்திற்கான கோயில் மற்றும் 19வது தீர்த்தாங்கரான மல்லிநாத் கோயில்.
ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள கிர்னார் மலையில் சமணர்களின் தீர்த்தாங்கரர்களின் கோயில் மற்றும் சிவன் கோயில் உள்ளது.
போர் பந்தர் அருகே வில்வேஸ்வரன் சிவன் கோயில், கீர்த்தி கோயில், சுவாமி நாராயணன் கோயில்.
ஜீனாகாட், பகாவூதின் மக்பாரா மசூதி
ஆசிய சிங்கங்களுக்கான கிர் தேசியப் பூங்கா, புதிதாக உருவாக்கப்பட்ட கிர் சோம்நாத எனும் மாவட்டத்தில் உள்ளது.
சௌராஷ்ட்டிர தேசத்தில் பார்சி மக்கள் :
பாரசீகத்தை கி.பி. 651ல் முழுவதுமாக வெற்றி கொண்ட கலிபா உமர் தலைமையிலான அரபு இசுலாமியர்கள், அங்கு வாழ்ந்த ஜோரோஸ்ட்ரீய (Zorostrianism) மதத்தை பின்பற்றும் மக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். பலர் கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி, பாரசீகத்தை விட்டு வெளியேறி இந்தியாவில், சிந்து பகுதியிலும், சௌராஷ்ட்ர தேசத்தின் குசராத்து கடற்கரை பகுதிகளில் 775ல் அடைக்கலம் அடைந்தனர். இவர்களைத்தான் பார்சி மக்கள் என்பர். பின்னர் இவர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சூரத், பம்பாய் போன்ற பகுதிகளில் குடியேறி தொழில் தொடங்கினர்.
சௌராஷ்ட்ரதேசமும், தமிழ்நாட்டுச் சௌராட்டிரர்களும் :
கசினி முகமது 17வது முறையாகவும் இறுதியாகவும், சனவரித் திங்கள் முப்பதாம் நாள் 1025ம் ஆண்டு, வியாழக்கிழமை அன்று சௌராஷ்ட்ர தேசத்தையும் சோமநாதபுரம் (குசராத்து) ஆலயத்தை தரைமட்டமாக இடித்து, ஐம்பதாயிரம் பேர்களைக் கொன்று , இருபதாயிரம் பேரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு, சோமநாதபுரம் கோயில் செல்வங்களை கொள்ளையடித்து, சூறையாடிய பிறகு மீதமுள்ள அப்பகுதி சௌராஷ்ட்ர மக்கள், பெரும்பாலோர் வேறு நாடுகளில் குடியேறினர். பின்பு தில்லி சுல்தான்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி, சௌராஷ்ட்ரர்கள் தேவகிரியை ஆண்ட யாதவர்கள் அரசில் குடியேறினர். பின்பு 1294ல் அலாவுதீன் கில்சி தேவகிரியைத் தாக்கி, கைப்பற்றிய பின்பு, சௌராட்டிரர்கள், விசயநகரப் பேரரசுவின் எல்லைப் பகுதியில் இருந்த காம்பிலி (Kampili) நாட்டில் குடியேறி அறுபது ஆண்டுகள் வாழ்ந்தனர். யாதவர்களின் அரசான தேவகிரியில் 200ஆண்டு காலம் வாழ்ந்து பின்னர் 1312ல்விசயநகர பேரரசில் குடியேறி வாழ்ந்தனர். பின்னர் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில், 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சௌராட்டிரர்கள், தமிழ்நாட்டில் குடிபெயர்ந்து, தெலுங்கு அரசர்கள் ஆண்ட மதுரை போன்ற பல்வேறு பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள்.

Saturday, September 27, 2014

பாஞ்சாயுத ஸ்தோத்துரு - ஸௌராஷ்ட்ரமும்


பாஞ்சாயுத ஸ்தோத்துரு - ஸௌராஷ்ட்ரமும்





ஸஸர் ஸஸர் ஸுரித் ஸொக3ன்
சுத3ர்சனு ஜொலிஞ்செ ஹுளொசஸொக3ன் – தே3வுன்
வைரினுக் ஸம்ஹார் கெரிகி3ன் பெருமாள்
ஹாது3செக்குருக் பாய்ம்பொள்ளுவோ

கோடி சாந்து3க் ஹுஜாள்க3ன், பெருமாள்
பொள்ளா ஹோடு3 வாரா ஸப்து3ஹால்
ஹீனுனுக் குலமுக் கலங்கட3ன் – செங்கு3
பாஞ்சாஜன்யுக் பாய்ம்பொள்ளுவோ

ஸொர்ணுக3ன் ஜொலிஞ்செ மேரு ஸோக3ன் – ஹீனுன்
ரக்ஷஸுன் குலம் நஸி ஹிப்3பி3
வைகு3ந்த3 வாசு ஹாது3க் க3லன் – க3த3
கௌமோத3கீக் பாய்ம்பொள்ளுவோ

தே3வுன் குலமுக் ரக்ஷன கெரத்தக் – ஹீனுன்
ரக்ஷஸுன் தொ3ஸ்க ஹெட3த்தக்
ரெக3து ந:வன் லொ:வ்வொகட்காக்
நந்த3க3முக் பாய்ம்பொள்ளுவோ

ஹாபா4ளு தா4க் ஹந்தா3ர் ஜவடி ஹிப்3பி3 – வைரின்
பஸ்கட் பிடு3க்கடன் தனுஸுதோ3ர்
சரம்கன் பாணு பொவ்ஸ் தே3ன்
ஸாரங்கு3க் பாய்ம்பொள்ளுவோ

ஸொள்பா4ரும் நிச்சு ஆச்சாருக3ன் – அய்து
கீத் எல்தெ கவி ஹிப்3பே3தி
வேதா3னான் அஸ்கி ஜீயேட் – நிச்சு
ஸ்ரேஷ்ட்டுன் வருனும் ஜிவ்லுவாய்

ஜெடா4ம் வைரின் ஃபிரையே வேளும் – தி3ல்ல
து3க்குன் தே3ன் தா4குன்னுக்
கீ3த் எல்தெ க3வி ஹிப்3பெ3த் – சுக3ம்
ஒண்டே3 ஜுடி ஜிவ்லுவாய்




நமஸ்கார் ஸெரொ
சிவமுருகன்

Saturday, October 05, 2013

ஸ்ரீமத் ஸௌராஷ்ட்ர ப்ரஸன்ன வெங்கடேஸ்வர ஸுப்ரபா4தம்

ஸ்ரீமத் ஸௌராஷ்ட்ர ப்ரஸன்ன வெங்கடேஸ்வர ஸுப்ரபா4தம் - (நாட்டாமை)N.S.விஸ்வநாதன்

கௌஸல்யாக் ஸுப்ரஜா ராமா!
களஹந்தா3ரு த3மேஸி பூ4மா!
ஸௌந்த3ர்யமூர்தி! ஸாரங்க பாணி!
ஸந்த்3யா கர்‍னொ தூ ஹூடி!

ஹூடி ஹூடி ஸ்ரீ கோவிந்த ஸ்வாமி!
ஹூடி ஹூடி செங்கு செக்ரதாரி!
ஹூடி ஹூடி ப்ரஸன்ன வெங்கடேஸ்வரு!
வொஸ்தின் கரஸ்தக் ஹூடி தூ!

சந்த3ர பிம்பமு முக2 விலாஸினி!
ஸாஸ்தக் ஸ்ருங்கா3ரு தி3வ்ய ரூபிணி!
இந்த்3ராணி தே3வின் வந்த3ன் லெக்ஷ்மி!
இன்பு ஸொளொ ஹொயேஸி ஹூடி!

ஸமஸ்த ஜெக3துர் பொ4ரெ வைஷ்ணவீ
ஜெக3த் ரக்ஷகி! ஸ்ரீ லெக்ஷ்மி தே3வி!
ஹுட3ஸ்தக் வேளு ஹொயேஸி மெனி
ஹொல்ல தே3வுக் ஸங்கி3 மாயி

கபுஸ் மேகு4ன் களதொ3ங்க3ரு ஸொட்டி3
ஹிமுஸ்பனி ஏட் சிலிஞ்சி லேதவேஸி
ஸோகு3ஸ் தொ3ங்க3ரும் ஹிப்பெ தே3வு
சொக்கட் ஹொயேஸி ஸொளிபா2ரு!

வஸந்த ம்ருது3 வரான் கு3வ்ணிலி
வஸுனா ஜாடுன் வவ்ரேஸி ஹிப்3பி3லி
பஸந்து3 தொ3ங்க3ர் ஹிப்3பெ3 தே3வு
பா4லா ஹொயேஸி ஸொளிபா2ரு!

ராத் மெனஸ்தெ கள ராக்ஷஸு
தா4க் தெ4ரி த4மெஸி ஹூடி தூ
ஸாத் தொ3ங்க3ரு ஹெப்3பெ3 தே3வு
ஸலீஸ் ஹொயேஸி ஸொளிபா2ரு

ஸொன்னா கொ3புருக் சுரும் தி4க்கிலேது
ஸுர்ய தா4ரான் ஜொலுஞ்சேஸ் யேடு
பொன்னா ஜா2டும் ஹிங்கெ தே3வு
பொள்ளா ஹொயேஸி ஸொளிபா2ரு

தி3ன்னு - கரனுக் வெது3ர் ஸீலி
தெ3மர் பூ2லுன் விகஸிஞ்சேஸி
ஸொந்து தொ3ங்க3ர் வெங்கடஸ்வரு
ஸ்வர்ணம் ஹொயேஸி ஸொளிபா2ரு

ரம்ய நாம கீ3துன் க3வ்லேதுன்
ரமான் ஹுடி அவரேஸி தே3வூ!
தி3வ்ய ப்ரஸன்ன வேங்கடேஸ்வரு
தி3வ்யம் ஹொயேஸி ஸொளிபா2ரு!

ஸேவார்த்தின்

ப்3ரஹ்ம சிவ இந்த்3ரு தே3வாதி3ன்
பிரேம ஹோரும் ஸேவ மைலேது
ப்3ரஹ்ம முஹூர்த்தும் அவிகின் ரீ:லீ
ப்ரிய தெ3ரிஸந ஸீல் ரி:யாஸி.

சதுர் வேதி3ன் ஸனகாதி3 ரிஷின்
ஜபதஸுன் முஸள்ளெ ஹாதுர்
வெது3ர் அவிகின் ஸேவ மைலி
விஸி நீ:ஸ்தக் நமி ரி:யாஸி.

பைந்தர் பொடிகின் பஞ்ச பூ4துன்
பரம பத3 சேவொ மைலேதுன்
சிந்தாம் ஹட்வன் ஸொண்ணாஸ்தக்
ஸீன் லைனா நமி ரி:யாஸி

பத்ரி ஸம்பங்கி3 வன மல்லின்
பாரிஜாத பூ2லுன் தொ2ள்சின் க2ள்ளி
அத்ரி கௌ3தம ஸப்த ரிஷின்
ஆஸோ ஹோரும் ஸேவொ மைலியாஸி.

ஆட் அக்ஷர் மொந்துர் மெல்லேது
அபுரஞ்ஜி கவாட்3 ஒர்த்தாமு
ஆட் தி3க்கு பா3லுன் அவி ரி:யாஸி
அபூர்வ ஸேவ மைல் ஸியாஸி

ஸொப்நாம்தி ஹட்வன் ஸொண்ணாஸ்தக்
ஸோ தொ3ங்க3ர் தடி3 ஸேவ மைலேது
சந்த்3ர ஸுர்ய நவக்3ரஹாதி தே3வுன்
ஸதா3 நமி யேட் ரி:யாஸி

பு2லெ த3மரு மது4 போ3தா3ம்
பு3டி அவெ நிள வொண்டு3 நுன்
புலெ பத3மு ஸெவ மைலி
புஜெ கரன் ஸொக பி2ரேஸி

ஜா2ட் ஸொடி3 சிடி3ன் ஹுடே3ஸி
ஜல்லி கிசு கிசு மென் க3வேஸி
வாட் ப4ந்தி3 ஸேவ மைலி
வைகுண்டு2 கவாட்3 ஸீலி அவேஸி

ஸொம்பு கீ3துன் வீணாம் பிட்டிலேதி
ஸ்வர்ண க3வாட் ஹூட் மெல்லேது
து3ம்புரு நாரத3 கின்னருன் தோர்
தி3வ்ய ஸேவ மைல் ரி:யாஸி

நாயகி3 பா4வும் நடன கோ3பாலுக்
நசி க3வெ கு3ருவுநுக் வந்தி3லி
மாத4வ கோ3விந்த3 வெங்கடேஸ்வரு
மகரேஸ் ஸேவ தோர் தாஸு

சரணாகெ3தி

ஆதி3மூலா மெனெ ஐஸ்து வெது3ர்
கெ3ருடோ4ர் அவிகின் ரக்ஷெ ஸ்ரீஹரி!
வேதி3ன் ஸங்கெ வாடுர் சலிகி3ன்
விமல பத3மும் சரண் பொடே3ஸி

து4ருவுகு காக்ஷி தி3யெ தே3வூ
தி3வ்ய த3ரிஸந ஸாஸ்தக் ஹோரு
பு4ருமு ஜா2டும் ரக்2கெ ரமகன்
பூ2லு பத3மும் சரண் பொடே3ஸி

சராசர்மும் பொ4ரெ ஜெக3ன்னாது2
ஸ‌னிம் ஆவ் மெனெ ப்ரஹாலாது3கு
நரஸிம்ஹ ரூபுமு அவெ ஸ்ரீ ஹரி
நளின பத3மும் சரண் பொடே3ஸி

பா3பு வத்தொ மொந்தூர் கர்லேஸி
பரசுராம அவ்தார் லியே ஸ்ரீ ஹரி!
ஸாபு தொ3ங்க3ர் நிள்செ மூர்த்தி
ஸத்ய பத3மும் சரண் பொடே3ஸி

ப3ளபூ2ல் பதா3ல் லகி3கின்
பத்தினி அஹல்ய ஹுடி நமிஸி
கள தெ3ய்டா3க் ஜீவ் க4லெ ஸ்ரீஹரி
கமல பத3மும் சரன் பொடே3ஸி

ரெத்துமு தெ2ப்பொ3 அர்ஜுனுகு தெ4ரி
நித்த கரெ ஸ்ரீனிவாஸா ஹரி
ஸெத்துமு வத்தாம் பொ4ரெ ஸ்ரீ ஹரி!
ஸ்ருங்கா3ர் பத3மும் சரண் பொடே3ஸி!

குசேலு தி3யெ அட்குல் கை2லி
குபே3ர நிதி4ன் லுச்சேஸி ஹட்வி
கேசவா! மாதவா! கோ3விந்தா3
கொம்பு3ள பத3மும் சரண் பொடே3ஸி

ஸெகுன் ஸீலி க்ருப கரயி
ஸெத்து பி4த்தரும் பொ4ரிகின் ரா:யி
லெகு3ன் தொப்புனா ரக்ஷன் ஸ்ரீஹரி
லலித பத3மும் சரன் பொடே3ஸி

வீஸுன் சார் தத்வம் தூ
விலாஸ் ஜெக3துர் பொ4ரெ தே3வூ
தீஸுன் கோடி ஸுர்ய ப்ரகாஷு
தி3வ்ய பத3மும் சரண் பொடே3ஸி

தூ ஜதொ து3ஸர் கோன் தே3வு
தி3வ்ய பத3மூஸ் போக்ஷி கே4ரு
பூ4 லோகுக் ரக்ஷெ வராஹ ஹரி
பூ2லு பத3மும் சரண் பொடே3ஸி

மங்களமு
நித்ய பரிபூர்னூகு நிச்சு மங்களம்
நிர்மல ஸ்வரூபுகு அத்த மங்களம்
ஸத்ய நாரயாணகு ஸதா3 மங்களம்
ஸௌராஷ்ட்ர வெங்கடேஸ்வருக் ஸுப4மங்களம்

சார் - ஹாத் ஸிங்கா3ர் ஸெரீருக் மங்களம்
சங்கு சக்ரதா4ரிகு ஜெய மங்களம் - தீ3
சார் அக்ஷர் தே3வுகு மங்களம்
தே3வுடு வெங்கடேஸ்வருக் தி3வ்ய மங்களம்

தொ3ங்க3ர் ஸதிக தெ4ரெ அங்கிளிக் மங்களம்
தொ3ள ஹுடி ரக்ஷெ ஸ்ரீ கோ3பாலுக் மங்களம்
கொங்கிடிம் பொ4ரெ ஸ்ரீ கோ3விந்தா3க் மங்களம்
கு3ள்ளெ வெங்கடேஸ்வருக் கொ2ப்3பு3ம் மங்களம்

சரணும் போட் மெனெ ஹாதுக் மங்களம்
ஸலீஸ்க மோக்ஷி தே3ஸ்தெக மங்களம்
மொரன் உஜ்வாவுக் ஹெட3ஸ்தக மங்களம்
மோஹன வெங்கடேஸ்வருக் மொ:ட்ட மங்களம்

பூ2லு வஸுநக பொ4ரிஸேஸ்தக மங்களம்
புன்னு பாபுன் நீ:ஸ்தெக மங்களம்
கீ2ளு மொன்னு ஹுடி க3வடெஸ்த மங்களம்
க்ருப கரெ வெங்கடேஸ்வருக் கெ4ட்டி மங்களம்

தீ2ன் பதாலும் மொவ்ஜெ தே3வுகு மங்களம்
தி3வ்ய முனின் ஹ்ருத3ய வாஸிகு மங்களம்
ஸீன் திர்ச்சன் ஸ்ரீனிவாஸுகு மங்களம்
ஸ்ரீமன் ப்ரஸன்ன வேங்கடேஸ்வருக் ஜெய‌மங்களம்

பூர்ணமும் பூர்ணு ஹொயஸ்தக மங்களம்
புள்ளொ கருமுநுக் பொஸஸ்தக மங்களம்
ஸுர்ணமும் ஜொலுஞ்சி ராஸ்த மங்களம்
சொக்கட் வெங்கடேஸ்வருக் ஸுப‌மங்களம்

கருணகன் தொ3ளர் க3வுஞ்சஸ்தக் மங்களம்
க‌2னி பெனின் வரிகின் தே3ஸ்தக மங்களம்
அருண பா4ஸ்கருகன் நிக்ளி அவத்தக‌ மங்களம்
அபுரஞ்ஜி வெங்கடேஸ்வருக் அஸ்கிமங்களம்

கீ3தும் அர்ஜுனக் கெர்ங்கடஸ்தக மங்களம்
ப4க3வத் கீ3தா வசெ பொம்ளொ தோணுக் மங்களம்
வேது3ம் பொ4ரெ விவேக த3ர்ஸிகு மங்களம்
விஸ்வனாது2க் ப்ரிய வெங்கடேஸ்வருக் சுப4மங்களம்

ஸுபா4ஷண யே ஸுப்ர பா4தமு
ஸொள் பா2ரும் நிச்சு க3வஸ்தெனுன்
சொக்கட் ஞான தீ3பும் மிளன்
ஸோதனான் தடி3கின் ஜிவன்


ꢯ꣄ꢬꢷꢪꢡ꣄ ꢱꣃꢬꢵꢯ꣄ꢜ꣄ꢬ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬ ꢱꢸꢦ꣄ꢬꢩꢵꢡꢪ꣄

ꢒꣃꢱꢭ꣄ꢫꢵꢒ꣄ ꢱꢸꢦ꣄ꢬꢙꢵ ꢬꢵꢪꢵ
ꢒꢳꢲꢥ꣄ꢣꢵꢬꢸ ꢣꢪꢿꢱꢶ ꢩꢹꢪꢵ
ꢱꣃꢥ꣄ꢣꢬ꣄ꢫꢪꢹꢬ꣄ꢡꢶ ꢱꢵꢬꢖ꣄ꢒ ꢦꢵꢠꢶ
ꢱꢥ꣄ꢣ꣄ꢫꢵ ꢒꢬ꣄ꢥꣁ ꢡꢹ ꢲꢹꢜꢶ

ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢯ꣄ꢬꢷ ꢒꣂꢮꢶꢥ꣄ꢡ ꢱ꣄ꢮꢵꢪꢶ
ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢖꢾꢖ꣄ꢒꢸ ꢖꢾꢒ꣄ꢬꢡꢵꢬꢶ
ꢲꢹꢜꢶ ꢲꢹꢜꢶ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢮꣁꢱ꣄ꢡꢶꢥ꣄ ꢒꢬꢱ꣄ꢡꢒ꣄ ꢲꢹꢜꢶ ꢡꢹ

ꢗꢥ꣄ꢣꢬ ꢦꢶꢪ꣄ꢦꢪꢸ ꢪꢸꢓ ꢮꢶꢭꢵꢱꢶꢥꢶ
ꢱꢵꢱ꣄ꢡꢒ꣄ ꢱ꣄ꢬꢸꢖ꣄ꢔꢵꢬꢸ ꢣꢶꢮ꣄ꢫ ꢬꢹꢦꢶꢠꢶ
ꢄꢥ꣄ꢣ꣄ꢬꢵꢠꢶ ꢣꢿꢮꢶꢥ꣄ ꢮꢥ꣄ꢣꢥ꣄ ꢭꢾꢒ꣄ꢰ꣄ꢪꢶ
ꢄꢥ꣄ꢦꢸ ꢱꣁꢳꣁ ꢲꣁꢫꢿꢱꢶ ꢲꢹꢜꢶ

ꢱꢪꢱ꣄ꢡ ꢘꢾꢔꢡꢸꢬ꣄ ꢩꣁꢬꢾ ꢮꣀꢯ꣄ꢠꢮꢷ
ꢘꢾꢔꢡ꣄ ꢬꢒ꣄ꢰꢒꢶ ꢯ꣄ꢬꢷ ꢭꢾꢒ꣄ꢰ꣄ꢪꢶ ꢣꢿꢮꢶ
ꢲꢸꢞꢱ꣄ꢡꢒ꣄ ꢮꢿꢳꢸ ꢲꣁꢫꢿꢱꢶ ꢪꢾꢥꢶ
ꢲꣁꢭ꣄ꢭ ꢣꢿꢮꢸꢒ꣄ ꢱꢖ꣄ꢔꢶ ꢪꢵꢫꢶ

ꢒꢦꢸꢱ꣄ ꢪꢿꢕꢸꢥ꣄ ꢒꢳꢣꣁꢖ꣄ꢔꢬꢸ ꢱꣁꢜ꣄ꢞꢶ
ꢲꢶꢪꢸꢱ꣄ꢦꢥꢶ ꢍꢜ꣄ ꢗꢶꢭꢶꢛ꣄ꢗꢶ ꢭꢿꢡꢮꢿꢱꢶ
ꢱꣂꢔꢸꢱ꣄ ꢣꣁꢖ꣄ꢔꢬꢸꢪ꣄ ꢲꢶꢦ꣄ꢦꢾ ꢣꢿꢮꢸ
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢮꢱꢥ꣄ꢡ ꢪ꣄ꢬꢸꢣꢸ ꢮꢬꢵꢥ꣄ ꢔꢸꢮ꣄ꢠꢶꢭꢶ
ꢮꢱꢸꢥꢵ ꢙꢵꢜꢸꢥ꣄ ꢮꢮ꣄ꢬꢿꢱꢶ ꢲꢶꢨ꣄ꢨꢶꢭꢶ
ꢦꢱꢥ꣄ꢣꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢲꢶꢨ꣄ꢨꢾ ꢣꢿꢮꢸ
ꢩꢵꢭꢵ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢬꢵꢡ꣄ ꢪꢾꢥꢱ꣄ꢡꢾ ꢒꢳ ꢬꢵꢒ꣄ꢰꢱꢸ
ꢤꢵꢒ꣄ ꢤꢾꢬꢶ ꢤꢪꢾꢱꢶ ꢲꢹꢜꢶ ꢡꢹ
ꢱꢵꢡ꣄ ꢣꣁꢖ꣄ꢔꢬꢸ ꢲꢾꢨ꣄ꢨꢾ ꢣꢿꢮꢸ
ꢱꢭꢷꢱ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢱꣁꢥ꣄ꢥꢵ ꢔꣁꢦꢸꢬꢸꢒ꣄ ꢗꢸꢬꢸꢪ꣄ ꢤꢶꢒ꣄ꢒꢶꢭꢿꢡꢸ
ꢱꢸꢬ꣄ꢫ ꢤꢵꢬꢵꢥ꣄ ꢙꣁꢭꢸꢛ꣄ꢗꢿꢱ꣄ ꢫꢿꢜꢸ
ꢦꣁꢥ꣄ꢥꢵ ꢚꢵꢜꢸꢪ꣄ ꢲꢶꢖ꣄ꢒꢾ ꢣꢿꢮꢸ
ꢦꣁꢳ꣄ꢳꢵ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢣꢶꢥ꣄ꢥꢸ - ꢒꢬꢥꢸꢒ꣄ ꢮꢾꢣꢸꢬ꣄ ꢱꢷꢭꢶ
ꢣꢾꢪꢬ꣄ ꢧꢹꢭꢸꢥ꣄ ꢮꢶꢒꢱꢶꢛ꣄ꢗꢿꢱꢶ
ꢱꣁꢥ꣄ꢡꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢮꢾꢖ꣄ꢒꢜꢱ꣄ꢮꢬꢸ
ꢱ꣄ꢮꢬ꣄ꢠꢪ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢬꢪ꣄ꢫ ꢥꢵꢪ ꢔꢷꢡꢸꢥ꣄ ꢔꢮ꣄ꢭꢿꢡꢸꢥ꣄
ꢬꢪꢵꢥ꣄ ꢲꢸꢜꢶ ꢂꢮꢬꢿꢱꢶ ꢣꢿꢮꢹ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢿꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢣꢶꢮ꣄ꢫꢪ꣄ ꢲꣁꢫꢿꢱꢶ ꢱꣁꢳꢶꢧꢵꢬꢸ

ꢱꢿꢮꢵꢬ꣄ꢡ꣄ꢡꢶꢥ꣄

ꢨ꣄ꢬ
ꢦꢶꢬꢿꢪ ꢲꣂꢬꢸꢪ꣄ ꢱꢿꢮ ꢪꣀꢭꢿꢡꢸ
ꢨ꣄ꢬ
ꢦ꣄ꢬꢶꢫ ꢣꢾꢬꢶꢱꢥ ꢱꢷꢭ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ꣎

ꢗꢡꢸꢬ꣄ ꢮꢿꢣꢶꢥ꣄ ꢱꢥꢒꢵꢣꢶ ꢬꢶꢰꢶꢥ꣄
ꢙꢦꢡꢱꢸꢥ꣄ ꢪꢸꢱꢳ꣄ꢳꢾ ꢲꢵꢡꢸꢬ꣄
ꢮꢾꢣꢸꢬ꣄ ꢂꢮꢶꢒꢶꢥ꣄ ꢱꢿꢮ ꢪꣀꢭꢶ
ꢮꢶꢱꢶ ꢥꢷ:ꢱ꣄ꢡꢒ꣄ ꢥꢪꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ꣎

ꢦꣀꢥ꣄ꢡꢬ꣄ ꢦꣁꢜꢶꢒꢶꢥ꣄ ꢦꢛ꣄ꢗ ꢩꢹꢡꢸꢥ꣄
ꢦꢬꢪ ꢦꢣ ꢗꢿꢮꣁ ꢪꣀꢭꢿꢡꢸꢥ꣄
ꢗꢶꢥ꣄ꢡꢵꢪ꣄ ꢲꢜ꣄ꢮꢥ꣄ ꢱꣁꢠ꣄ꢠꢵꢱ꣄ꢡꢒ꣄
ꢱꢷꢥ꣄ ꢭꣀꢥꢵ ꢥꢪꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢦꢡ꣄ꢬꢶ ꢱꢪ꣄ꢦꢖ꣄ꢔꢶ ꢮꢥ ꢪꢭ꣄ꢭꢶꢥ꣄
ꢦꢵꢬꢶꢙꢵꢡ ꢧꢹꢭꢸꢥ꣄ ꢢꣁꢳ꣄ꢗꢶꢥ꣄ ꢓꢳ꣄ꢳꢶ
ꢂꢡ꣄ꢬꢶ ꢔꣃꢡꢪ ꢱꢦ꣄ꢡ ꢬꢶꢰꢶꢥ꣄
ꢃꢱꣂ ꢲꣂꢬꢸꢪ꣄ ꢱꢿꢮꣁ ꢪꣀꢭꢶꢫꢵꢱꢶ꣎

ꢃꢜ꣄ ꢂꢒ꣄ꢰꢬ꣄ ꢪꣁꢥ꣄ꢡꢸꢬ꣄ ꢪꢾꢭ꣄ꢭꢿꢡꢸ
ꢂꢦꢸꢬꢛ꣄ꢙꢶ ꢒꢮꢵꢞ꣄ ꢏꢬ꣄ꢡ꣄ꢡꢵꢪꢸ
ꢃꢜ꣄ ꢣꢶꢒ꣄ꢒꢸ ꢨꢵꢭꢸꢥ꣄ ꢂꢮꢶ ꢬꢶ:ꢫꢵꢱꢶ
ꢂꢦꢹꢬ꣄ꢮ ꢱꢿꢮ ꢪꣀꢭ꣄ ꢱꢶꢫꢵꢱꢶ

ꢱꣁꢦ꣄ꢥꢵꢪ꣄ꢡꢶ ꢲꢜ꣄ꢮꢥ꣄ ꢱꣁꢠ꣄ꢠꢵꢱ꣄ꢡꢒ꣄
ꢱꣂ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢡꢞꢶ ꢱꢿꢮ ꢪꣀꢭꢿꢡꢸ
ꢗꢥ꣄ꢣ꣄ꢬ ꢱꢸꢬ꣄ꢫ ꢥꢮꢔ꣄ꢬꢲꢵꢡꢶ ꢣꢿꢮꢸꢥ꣄
ꢱꢣꢵ ꢥꢪꢶ ꢫꢿꢜ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢧꢸꢭꢾ ꢣꢪꢬꢸ ꢪꢤꢸ ꢨꣂꢣꢵꢪ꣄
ꢨꢸꢜꢶ ꢂꢮꢾ ꢥꢶꢳ ꢮꣁꢠ꣄ꢞꢸ ꢥꢸꢥ꣄
ꢦꢸꢭꢾ ꢦꢣꢪꢸ ꢱꢾꢮ ꢪꣀꢭꢶ
ꢦꢸꢘꢾ ꢒꢬꢥ꣄ ꢱꣁꢒ ꢧꢶꢬꢿꢱꢶ

ꢚꢵꢜ꣄ ꢱꣁꢞꢶ ꢗꢶꢞꢶꢥ꣄ ꢲꢸꢞꢿꢱꢶ
ꢙꢭ꣄ꢭꢶ ꢒꢶꢗꢸ ꢒꢶꢗꢸ ꢪꢾꢥ꣄ ꢔꢮꢿꢱꢶ
ꢮꢵꢜ꣄ ꢩꢥ꣄ꢣꢶ ꢱꢿꢮ ꢪꣀꢭꢶ
ꢮꣀꢒꢸꢠ꣄ꢝꢸ ꢒꢮꢵꢞ꣄ ꢱꢷꢭꢶ ꢂꢮꢿꢱꢶ

ꢱꣁꢪ꣄ꢦꢸ ꢔꢷꢡꢸꢥ꣄ ꢮꢷꢠꢵꢪ꣄ ꢦꢶꢜ꣄ꢜꢶꢭꢿꢡꢶ
ꢱ꣄ꢮꢬ꣄ꢠ ꢔꢮꢵꢜ꣄ ꢲꢹꢜ꣄ ꢪꢾꢭ꣄ꢭꢿꢡꢸ
ꢣꢸꢪ꣄ꢦꢸꢬꢸ ꢥꢵꢬꢣ ꢒꢶꢥ꣄ꢥꢬꢸꢥ꣄ ꢡꣂꢬ꣄
ꢣꢶꢮ꣄ꢫ ꢱꢿꢮ ꢪꣀꢭ꣄ ꢬꢶ:ꢫꢵꢱꢶ

ꢥꢵꢫꢔꢶ ꢩꢵꢮꢸꢪ꣄ ꢥꢜꢥ ꢔꣂꢦꢵꢭꢸꢒ꣄
ꢥꢗꢶ ꢔꢮꢾ ꢔꢸꢬꢸꢮꢸꢥꢸꢒ꣄ ꢮꢥ꣄ꢣꢶꢭꢶ
ꢪꢵꢤꢮ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸ
ꢪꢒꢬꢿꢱ꣄ ꢱꢿꢮ ꢡꣂꢬ꣄ ꢡꢵꢱꢸ

ꢗꢬꢠꢵꢔꢾꢡꢶ

ꢃꢣꢶꢪꢹꢭꢵ ꢪꢾꢥꢾ ꢎꢱ꣄ꢡꢸ ꢮꢾꢣꢸꢬ꣄
ꢔꢾꢬꢸꢟꣂꢬ꣄ ꢂꢮꢶꢒꢶꢥ꣄ ꢬꢒ꣄ꢰꢾ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢮꢿꢣꢶꢥ꣄ ꢱꢖ꣄ꢒꢾ ꢮꢵꢜꢸꢬ꣄ ꢗꢭꢶꢔꢶꢥ꣄
ꢮꢶꢪꢭ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢤꢸꢬꢸꢮꢸꢒꢸ ꢒꢵꢒ꣄ꢰꢶ ꢣꢶꢫꢾ ꢣꢿꢮꢹ
ꢣꢶꢮ꣄ꢫ ꢣꢬꢶꢱꢥ ꢱꢵꢱ꣄ꢡꢒ꣄ ꢲꣂꢬꢸ
ꢩꢸꢬꢸꢪꢸ ꢚꢵꢜꢸꢪ꣄ ꢬꢓ꣄ꢒꢾ ꢬꢪꢒꢥ꣄
ꢧꢹꢭꢸ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢗꢬꢵꢗꢬ꣄ꢪꢸꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢘꢾꢔꢥ꣄ꢥꢵꢢꢸ
ꢱꢥꢶꢪ꣄ ꢃꢮ꣄ ꢪꢾꢥꢾ ꢦ꣄ꢬꢲꢵꢭꢵꢣꢸꢒꢸ
ꢥꢬꢱꢶꢪ꣄ꢲ ꢬꢹꢦꢸꢪꢸ ꢂꢮꢾ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢥꢳꢶꢥ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢨꢵꢦꢸ ꢮꢡ꣄ꢡꣁ ꢪꣁꢥ꣄ꢡꢹꢬ꣄ ꢒꢬ꣄ꢭꢿꢱꢶ
ꢦꢬꢗꢸꢬꢵꢪ ꢂꢮ꣄ꢡꢵꢬ꣄ ꢭꢶꢫꢿ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢱꢵꢦꢸ ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢥꢶꢳ꣄ꢖꢾ ꢪꢹꢬ꣄ꢡ꣄ꢡꢶ
ꢱꢡ꣄ꢫ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢨꢳꢧꢹꢭ꣄ ꢦꢣꢵꢭ꣄ ꢭꢔꢶꢒꢶꢥ꣄
ꢦꢡ꣄ꢡꢶꢥꢶ ꢂꢲꢭ꣄ꢫ ꢲꢸꢜꢶ ꢥꢪꢶꢱꢶ
ꢒꢳ ꢣꢾꢫ꣄ꢞꢵꢒ꣄ ꢙꢷꢮ꣄ ꢕꢭꢾ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢒꢪꢭ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢥ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢬꢾꢡ꣄ꢡꢸꢪꢸ ꢢꢾꢦ꣄ꢨꣁ ꢂꢬ꣄ꢙꢸꢥꢸꢒꢸ ꢤꢾꢬꢶ
ꢥꢶꢡ꣄ꢡ ꢒꢬꢾ ꢯ꣄ꢬꢷꢥꢶꢮꢵꢱꢵ ꢲꢬꢶ
ꢱꢾꢡ꣄ꢡꢸꢪꢸ ꢮꢡ꣄ꢡꢵꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢯ꣄ꢬꢷ ꢲꢬꢶ
ꢱ꣄ꢬꢸꢖ꣄ꢔꢵꢬ꣄ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢒꢸꢗꢿꢭꢸ ꢣꢶꢫꢾ ꢂꢜ꣄ꢒꢸꢭ꣄ ꢓꣀꢭꢶ
ꢒꢸꢨꢿꢬ ꢥꢶꢤꢶꢥ꣄ ꢭꢸꢗ꣄ꢗꢿꢱꢶ ꢲꢜ꣄ꢮꢶ
ꢒꢿꢗꢮꢵ ꢪꢵꢡꢮꢵ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣꢵ
ꢒꣁꢪ꣄ꢨꢸꢳ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢱꢾꢒꢸꢥ꣄ ꢱꢷꢭꢶ ꢒ꣄ꢬꢸꢦ ꢒꢬꢫꢶ
ꢱꢾꢡ꣄ꢡꢸ ꢩꢶꢡ꣄ꢡꢬꢸꢪ꣄ ꢩꣁꢬꢶꢒꢶꢥ꣄ ꢬꢵ:ꢫꢶ
ꢭꢾꢔꢸꢥ꣄ ꢡꣁꢦ꣄ꢦꢸꢥꢵ ꢬꢒ꣄ꢰꢥ꣄ ꢯ꣄ꢬꢷꢲꢬꢶ
ꢭꢭꢶꢡ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢥ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢮꢷꢱꢸꢥ꣄ ꢗꢵꢬ꣄ ꢡꢡ꣄ꢮꢪ꣄ ꢡꢹ
ꢮꢶꢭꢵꢱ꣄ ꢘꢾꢔꢡꢸꢬ꣄ ꢩꣁꢬꢾ ꢣꢿꢮꢹ
ꢡꢷꢱꢸꢥ꣄ ꢒꣂꢜꢶ ꢱꢸꢬ꣄ꢫ ꢦ꣄ꢬꢒꢵꢰꢸ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢡꢹ ꢙꢡꣁ ꢣꢸꢱꢬ꣄ ꢒꣂꢥ꣄ ꢣꢿꢮꢸ
ꢣꢶꢮ꣄ꢫ ꢦꢣꢪꢹꢱ꣄ ꢦꣂꢒ꣄ꢰꢶ ꢕꢿꢬꢸ
ꢩꢹ ꢭꣂꢒꢸꢒ꣄ ꢬꢒ꣄ꢰꢾ ꢮꢬꢵꢲ ꢲꢬꢶ
ꢧꢹꢭꢸ ꢦꢣꢪꢸꢪ꣄ ꢗꢬꢠ꣄ ꢦꣁꢞꢿꢱꢶ

ꢪꢖ꣄ꢒꢳꢪꢸ
ꢥꢶꢡ꣄ꢫ ꢦꢬꢶꢦꢹꢬ꣄ꢥꢹꢒꢸ ꢥꢶꢗ꣄ꢗꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢥꢶꢬ꣄ꢪꢭ ꢱ꣄ꢮꢬꢹꢦꢸꢒꢸ ꢂꢡ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢡ꣄ꢫ ꢥꢵꢬꢫꢵꢠꢒꢸ ꢱꢣꢵ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꣃꢬꢵꢯ꣄ꢜ꣄ꢬ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢱꢸꢩꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢗꢵꢬ꣄ - ꢲꢵꢡ꣄ ꢱꢶꢖ꣄ꢔꢵꢬ꣄ ꢱꢾꢬꢷꢬꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢗꢖ꣄ꢒꢸ ꢗꢒ꣄ꢬꢤꢵꢬꢶꢒꢸ ꢘꢾꢫ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄ - ꢣꢷ
ꢗꢵꢬ꣄ ꢂꢒ꣄ꢰꢬ꣄ ꢣꢿꢮꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꢿꢮꢸꢜꢸ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢣꢶꢮ꣄ꢫ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢣꣁꢖ꣄ꢔꢬ꣄ ꢱꢡꢶꢒ ꢤꢾꢬꢾ ꢂꢖ꣄ꢒꢶꢳꢶꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꣁꢳ ꢲꢸꢜꢶ ꢬꢒ꣄ꢰꢾ ꢯ꣄ꢬꢷ ꢔꣂꢦꢵꢭꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢒꣁꢖ꣄ꢒꢶꢜꢶꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢯ꣄ꢬꢷ ꢔꣂꢮꢶꢥ꣄ꢣꢵꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢔꢸꢳ꣄ꢳꢾ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢓꣁꢨ꣄ꢨꢸꢪ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢗꢬꢠꢸꢪ꣄ ꢦꣂꢜ꣄ ꢪꢾꢥꢾ ꢲꢵꢡꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢭꢷꢱ꣄ꢒ ꢪꣂꢒ꣄ꢰꢶ ꢣꢿꢱ꣄ꢡꢾꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢪꣁꢬꢥ꣄ ꢆꢙ꣄ꢮꢵꢮꢸꢒ꣄ ꢲꢾꢞꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢪꣂꢲꢥ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢪꣁ:ꢜ꣄ꢜ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢧꢹꢭꢸ ꢮꢱꢸꢥꢒ ꢩꣁꢬꢶꢱꢿꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢦꢸꢥ꣄ꢥꢸ ꢦꢵꢦꢸꢥ꣄ ꢥꢷ:ꢱ꣄ꢡꢾꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢓꢷꢳꢸ ꢪꣁꢥ꣄ꢥꢸ ꢲꢸꢜꢶ ꢔꢮꢜꢾꢱ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢒ꣄ꢬꢸꢦ ꢒꢬꢾ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢕꢾꢜ꣄ꢜꢶ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢢꢷꢥ꣄ ꢦꢡꢵꢭꢸꢪ꣄ ꢪꣁꢮ꣄ꢘꢾ ꢣꢿꢮꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢣꢶꢮ꣄ꢫ ꢪꢸꢥꢶꢥ꣄
ꢱꢷꢥ꣄ ꢡꢶꢬ꣄ꢗ꣄ꢗꢥ꣄ ꢯ꣄ꢬꢷꢥꢶꢮꢵꢱꢸꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢯ꣄ꢬꢷꢪꢥ꣄ ꢦ꣄ꢬꢱꢥ꣄ꢥ ꢮꢿꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢘꢾꢫꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢦꢹꢬ꣄ꢠꢪꢸꢪ꣄ ꢦꢹꢬ꣄ꢠꢸ ꢲꣁꢫꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢦꢸꢳ꣄ꢳꣁ ꢒꢬꢸꢪꢸꢥꢸꢒ꣄ ꢦꣁꢱꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢱꢸꢬ꣄ꢠꢪꢸꢪ꣄ ꢙꣁꢭꢸꢛ꣄ꢗꢶ ꢬꢵꢱ꣄ꢡ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢱꢸꢦꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢒꢬꢸꢠꢒꢥ꣄ ꢣꣁꢳꢬ꣄ ꢔꢮꢸꢛ꣄ꢗꢱ꣄ꢡꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢓꢥꢶ ꢦꢾꢥꢶꢥ꣄ ꢮꢬꢶꢒꢶꢥ꣄ ꢣꢿꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢂꢬꢸꢠ ꢩꢵꢱ꣄ꢒꢬꢸꢒꢥ꣄ ꢥꢶꢒ꣄ꢳꢶ ꢂꢮꢡ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢂꢦꢸꢬꢛ꣄ꢙꢶ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢂꢱ꣄ꢒꢶꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢔꢷꢡꢸꢪ꣄ ꢂꢬ꣄ꢙꢸꢥꢒ꣄ ꢒꢾꢬ꣄ꢖ꣄ꢒꢜꢱ꣄ꢡꢒ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢩꢔꢮꢡ꣄ ꢔꢷꢡꢵ ꢮꢖꢾ ꢦꣁꢪ꣄ꢳꣁ ꢡꣂꢠꢸꢒ꣄ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢮꢿꢣꢸꢪ꣄ ꢩꣁꢬꢾ ꢮꢶꢮꢿꢒ ꢣꢬ꣄ꢱꢶꢒꢸ ꢪꢖ꣄ꢒꢳꢪ꣄
ꢮꢶꢱ꣄ꢮꢥꢵꢢꢸꢒ꣄ ꢦ꣄ꢬꢶꢫ ꢮꢾꢖ꣄ꢒꢜꢿꢱ꣄ꢮꢬꢸꢒ꣄ ꢗꢸꢩꢪꢖ꣄ꢒꢳꢪ꣄

ꢱꢸꢩꢵꢰꢠ ꢫꢿ ꢱꢸꢦ꣄ꢬ ꢩꢵꢡꢪꢸ
ꢱꣁꢳ꣄ ꢧꢵꢬꢸꢪ꣄ ꢥꢶꢗ꣄ꢗꢸ ꢔꢮꢱ꣄ꢡꢾꢥꢸꢥ꣄
ꢗꣁꢒ꣄ꢒꢜ꣄ ꢛꢵꢥ ꢣꢷꢦꢸꢪ꣄ ꢪꢶꢳꢥ꣄
ꢱꣂꢡꢥꢵꢥ꣄ ꢡꢞꢶꢒꢶꢥ꣄ ꢙꢶꢮꢥ꣄



Sunday, July 14, 2013

கடவுள்களும் – ஆயுதங்களும்


கடவுள்களும் – ஆயுதங்களும்



ஸ்புரத் ஸஹஸ்ரார சிகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்
ஸுரத் விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

ஆயிரமாயிரம் ஆதவன் கதிரென
சுதர்சனம் சொலித்திடும் தீச்சுடராய் - தேவர்தம்
பகைவரை அழித்து நிற்கும் பெருமான்
கைச்சக்க்ரத்தைச் சரணடைவோம்


            விஷ்ணோர் முகோத்தா நில பூரிதஸ்ய
          யஸ்ய த்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
          தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
          சங்கம் ஸதா(அ)ஹம் ச்ரணம் ப்ரபத்யே

கோடி மதியின் வெள்ளொளியாய் – பெருமான்
கோவைச் செவ்வாய் காற்றொலியால்
தானவர் தன்குலம் கலங்கடிக்கும் – சங்கு
பாஞ்சஜன்யத்தைச் சரணடைவோம்


            ஹிரண்மயீம் மேருஸமான ஸாரம்
          கௌமோதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம்
          வைகுண்ட வாமாக்ர கரா பிம்ருஷ்டாம்
          கதாம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

பொன்னென மின்னும் மேருவைப் போல் - கெட்ட
தைத்யர் தன் குலம் அழித்து நின்று
வைகுந்த வாசனின் கரந்தவழும் – கதை
கௌமோதகீயைச் சரணடைவோம்


            ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்ட
          சேத க்ஷர சோணித திக்த தாராம்
          தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
          கட்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

தேவர்தம் குடியை காத்திடவே – கொடிய
ராக்கதர் தந்தலை கொய்தவர்தம்
உதிரத்தில் குளித்த செவ்வாளாம்
நந்தகம் தன்னை சரணடைவோம்


யஜ்ஜ்யாநி நாத ஸ்ரவணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பாண வர்ஷ
ஸார்ங்கம் ஸதா(அ)ஹம் சரணம் ப்ரபத்யே

மின்னலாய் பயஇருள் போக்கி நின்று – பகைவர்
பின்னமாய் இடிந்திட நாணொலிக்க
சாரமாய் அம்பு மாரியை பொழிந்திடும்
சாரங்கத்தை என்றும் சரணடைவோம்


இமம் ஹரே பஞ்ச மஹாயுதா நாம்
ஸ்தவம் படேத் யோ (அ)நுதிநம் ப்ரபாதே
ஸமஸ்த து:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

காலையில் அனுதினம் கருத்துடனே – ஆயுத
மாலையிதை ஓதி நின்றால்
துன்பங்கள் அனைத்தும் நீங்கியிங்கு – நித்ய
தூயன் அருளில் துய்த்திடலாம்.

வநேரணே சத்ரு ஜலாக்நி மத்யே
யத்ருச்யா பத்ஸு மஹா பயேஸு
இதம் படன் ஸ்தோத்ர நா குலாத்மா
ஸுகி பவேத் தத்க்ருத ஸர்வ ரக்ஷ:

போரினில் எதிரிகள் சூழ்ந்திடினும் - கெட்ட
பேரிடர் பொழுதின் பயங்களிலும்
தோத்திரம் இதனை ஓதி நின்றால் - சுகம்
மாத்திரம் கிட்டிங்கு வாழ்ந்திடலாம்.

இப்படி ஆயுத பாமாலை இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். கடவுள்களுக்கு ஏன் ஆயுதங்கள் என்று பல நிலைகளில், பல பேருக்கு சந்தேகங்கள் எழுவதுண்டு. நான் பங்கெடுத்த ஒரு அலுவலக பயிற்ச்சியின் போது, பயிற்ச்சியின் இடையில் கடவுள்களின் ஆயுதங்களுக்கும், ஆளுமைத்திறங்களின் பிரிவில் இருக்கும் சிலவற்றிக்கு உள்ள ஒற்றுமைகளை காட்டினார் பேச்சாளர். எல்லா ஆயுதங்களையும் சற்றே உற்று நோக்கினால் வேற்றுமையில் ஒரு ஒற்றுமை தோன்றும், எடுத்து காட்டாக கடவுளர் கையில் ஆயுதங்கள், 2,4,6,8,10 … என, இரண்டும் அதன் மடங்காகவும் தான் வைத்திருப்பார், ஒன்று பிரிக்கும் விதமாகவும் மற்றொன்று சேர்க்கும் விதமாக இருக்கும்.

சங்கு - சக்கரம்
வில் - அம்பு
கதை – தாமரை அல்லது அன்னகின்னம்
அங்குசம் அல்லது கோடாலி - பாசம்
அபய அல்லது வரத ஹஸ்தம் – ஈட்டி
வாள் – கேடையம்
கும்பம் – தாமரை அல்லது அகப்பை

இப்படியாக ஆயுதங்கள் இரட்டையாகவும், அதை தாங்கிய கரங்கள் சற்றே தளர்வாக பிடிக்கப்பட்டும் இருப்பதை கவனிக்கலாம். இப்படியான ஆயுதங்கள் எதை சொல்கின்றன? எதை உணர்த்துகின்றன? எதை கற்பிக்கின்றன? என்று சிந்திக்க வைத்தார் பயிற்ச்சியாளர்.

பார்கடலில் இருந்து தன்வந்திரி பகவான் அமிர்த கலசத்துடன் வெளிப்படுகிறார், அவரை தேவர்களும் ரிஷிமுனிகளும் பலவாறு போற்றுகின்றனர். நாரயணனே தன்வந்திரியாக வருகின்றார் என்றும், எல்லா துன்பங்களையும் போக்குகிறார் என்றும் புகழ்கின்றனர். தான் வைத்திருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அமிர்தமாக்கி வந்துள்ளார் என்று போற்றுகிறார்கள். எனில் அத்தகைய ஆயுதங்கள் நேரம் வரும் போது அதுவே அமிர்தமாகி விடுகின்றது.

     மேலும் சில சிந்தனைகள் நினைவில் நின்றன, நித்ய பூஜைகளின் போது அபிஷேகம், ஆராதனை, சந்தனம், மஞ்சள் மற்றும் அட்சதை என்று பல மங்கள சமாச்சாரங்கள் அதிகமாகவே இந்துமதத்தில் உண்டு.


முதலில் அபிஷேகத்திற்க்கு வருவோம்!





அபிஷேகம் – அபிஷேகம் என்றவுடன் அனைவருக்கும் அபிஷேக பிரியரான சிவபெருமான் தான் ஞாபகத்திற்க்கு வருவார், பன்னீர், பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், தேன், சந்தனம் மற்றும் மஞ்சள் கரைசல், தண்ணீர் என பல அபிஷேகங்கள் சிவபெருமானுக்கு செய்வது உங்கள் ஞாபகத்திற்க்கு வரலாம். இது எப்படி ஆளுமை திறனில் ஒத்துப் போகும் என்று நினைக்கலார்ம், நாம் ஒவ்வொரு நாளும் பல விதமான சிந்தனைகளை கடந்து வருகிறோம், நேர்மறையான – எதிர்மறையான சிந்தனைகளை கடக்கிறோம், முதலில் அதை எல்லாம் ஒன்றுமற்ற ஒரு பொருளாக ஆக்கினால் தான் நற்சிந்தனைகளை எளிதில் கொண்டு வர இயலும், அதையே இந்த அபிஷேகத்திற்கான விளக்கம் என்றார் (அட சரிதான்). (Orientation).




அலங்காரம் – அலங்காரம் என்றவுடன் பெருமாள் மகாவிஷ்ணுவும், முருகனும் உங்கள் நினைவிற்க்கு வருவர், பல அவதார அலங்காரங்கள், பல படை வீடு அலங்காரங்கள் என்றும், பட்டு, பீதாம்பரன், விபூதி, சந்தனம், குங்குமம், திருமன், பூ, பழம், மஞ்சள் மற்றும் ஆபரணங்கள் போன்ற நற்பொருட்களும் அலங்காரத்திற்க்கு வக்காலத்து வாங்க தங்களின் நினைவிற்க்கு வரலாம், அலங்காரம் என்பது ஒவ்வொரு நாளும் மாறாது நடைபெற கூடியது, இறைவனாக எண்ணி வணங்கும் உருவிற்க்கு மந்திரம் ஓதி நித்தியமாக நடக்க ஏற்பாடுகள் செய்து மறைபொருளாக இன்றைய தலைமுறைக்கு காட்டியுள்ள ஆளுமை திறன் ஒன்றுமற்ற ஒரு பொருளின் மீது நற்சிந்தனைகளை - செயல்களை பழக்கி விட்டால் அது நல்ல படியாகவே முடியும் இதுவே அலங்காரத்தின் விளக்கம். (அப்படிதானே) (Presentation)

ஆயுதங்கள் – சரி தலைப்பிற்க்கு வருவோம்

ஆயுதங்கள் எல்லாம் ஒருசில உட்பொருளைகளை நிலை நிறுத்துகின்றன

சங்கு – சக்கரம்

 

சங்கு சக்கரம் என்றவுடன் நம் நினைவில் வருவது திருப்பதி பெருமானின் வலது தோளில் இருக்கும் சுதர்சனம் என்ற சக்கராயுதமும், இடது தோளில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற சங்கும் தான். அப்பேற்பட்ட சங்கும் சக்கரமும் சொல்வது என்ன?

சங்கு என்பது ஒருவர்க்கு ஒருவர் செய்துகொள்ளும் சங்கேதங்களாக – தொலைதொடர்புகளாக இருந்துள்ளது, அவ்வாறு சங்கேதங்கள் மறுபடி மறுபடி ஆய்வு செய்யவைக்க வேண்டும் என்பதை சங்கின் ஜோடியான சக்கரம் உணர்த்துகிறது. (Communication)

சக்கரம் என்பது சுழன்று கொண்டிருகக் கூடியது அவ்வாறாக நாமும் நம் செயல்களில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்பது நாம் கற்கவேண்டிய பாடமாம். (Re-Visiting goal)

வில் – அம்பு




அம்பானது எவ்வளவு தான் கூர்மையானதாக் இருந்தாலும் அது தன் இலக்கை அடைய வில் என்ற சார்பு ஆயுதம் தேவைப்படுகிறது. அதே போல் எப்போதும் ஒரு சிறந்த இணை தேடி அடையவேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றது. (Getting perfect match)

அங்குசம் அல்லது கோடாலி – பாசம்




கோடலி என்பது - ஒரு பெரும் செயலை பல பிரிவாக கொண்டு செயல்படவேண்டி சிறு சிறு பிரிவாக பிரிக்க தயங்க கூடாது என்று சொல்கிறது. (Spliting the Mass-Task in to tasks)

அங்குசம் – அங்குசமானது ஒரு செயல் தன் இலக்கை மீறி செயல் படும் போது அதை அதன் இலக்கிற்க்கு நிலை நிறுத்துவதை குறிக்கிறது. (Control)

பாசம் (கயிறு) – கயிறானது எவ்வாறு வெட்டுப்பட்ட பொருட்களை இணைக்க பயன்படுகிறதோ அவ்வாறு வெட்டப்பட்ட செயல்களை இணைவேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. (Merging the tasks)


அபய ஹஸ்தம்
எதேனும் தவறு நேரும் சமயம் நாமாக சென்று அதை வெளிபடுத்தி அதற்க்கான தீர்வை – அறிவுரையை எதிர்நோக்கும் சம்பவத்தை குறிப்பது. (Seeking for Approval/Advice)

வரத ஹஸ்தம்
எல்லாம் நலமாகும் தருணத்தில் அதை பரிசீலித்து அதற்க்கான நல்வினையை வரமாக வழங்குவது. (Appraising – rewarding)




ஈட்டி - சூலம் - வேல்
நலமாகத பட்சத்தில் கொடுக்கபடும் தண்டனையை வெளிபடுத்தும் பொருளாக காட்டுகிறது ஈட்டி. (Demoting)

வாள் – கேடையம்
வாள் கேடையம் இரண்டில் ஒன்று தாக்குவதற்க்கும் மற்றொன்று தடுப்பதற்க்கும் பயன்படுகிறது. (Attack & Defence)




கதை – தாமரை அல்லது அன்னகின்னம்
கதை – தண்டனையையும், தாமரை அன்னகின்னம் – வரத்தையும் காட்டுகிறது. ஒவ்வொரு செயல்களின் முடிவில் ஒரு நன்மையோ தீமையோ விளையும் என்பதன் வெளிபாடு தான் கதை – தாமரை அல்லது அன்னகின்னம் தெரிவிக்கிறது.

சரி எல்லாம் சரியாக இருந்து விட்டால் கிடைப்பது யாது என சிலருக்கு, குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கேள்வியாக இருக்கும். அதையும் பேச்சாளர் வெளிபட்டுத்தினார் அது தான் இலக்கு. (AIM for the task)
ஆக எம்மை இமைபொழுதும் நீங்காது காக்கும் ஆயுதங்களே – எண்ணங்களே – உம்மை போற்றுதலில் எம்மையே எண்ணுகிறோம் என்பது உணர்ந்தால் அதுவே திண்ணம்.


வணக்கங்களுடன்
சிவமுருகன்

Sunday, December 25, 2011

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண அசைபடம்





ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருக்கல்யாண அசைபடம்





Friday, December 16, 2011

ஸௌராஷ்ட்ரா நாட்காட்டி



அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம்,

இன்று தான் எமது இந்நாட்காட்டி முழுக்க நமது லிபியில் வடித்து முடிக்கப்பட்டது. உங்கள் மேலான பார்வைக்கும், சமுக நண்பர்களுக்கும் புத்தாண்டு பரிசாக தருவதற்க்கும் இது மிகவும் சரியானது என்று உங்களை எண்ண தூண்டும் என்று நம்புகிறேன்.

இதன் முன்னர் யாம் வெளியிட்ட இப்படைப்பின் முன் வெளியீட்டை கண்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும், மேலதிக தகவல்களையும் தந்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி நன்றி நன்றி.

அன்புடன்
சிவமுருகன்

Sunday, November 06, 2011

காத்திருக்கிறேன் இந்த நாளுக்காக


காத்திருக்கிறேன் இந்த நாளுக்காக

Wednesday, August 31, 2011

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 9









8. கலி ஸுட்டெ ஸர்கு

116 – ஹந்தவு அவாரும் நளு ஹவ்ளார் ஜீ செல்லியெஸ்
ஸெந்தெவ்க கொன்னி ஸியான் – ரு:ந்தெஸி
தாம் தாம்மு பஜெய தந்து சிஸ்லொ ரஸ்லொ
ஸோம் ஸோவு மெளெ ஸொகன்

117 – ஓடு களல்லன் தெரி உலாஸ்க ஸகி ஸெரொ
தேடவெ ஜணளி ஸெவ்கின் – காடும்
ஜல்லிஸ் ர:த்தத்தொ தமயந்தி ஜொவள் ஜீ
மெல்லிஸி சொகட்வேள் மெனி

118 – நொவ்வக அவ்ரிய ஹந்தய்துகு நு:ருனுக் தட்டி ஸி அவெஒ மெனிஸி
ஸொவ்வள் தின்னுகன் தொளாம்பனி ஸொடி ஸொடி தமயந்தி ஸினிஸி
ஜொவ்வள் அவெய நு:ருனுக் ஸீ ஜுன்ன ஹட்வனும் நளு புடெஸி
தொவ்வள் புலெஸ் பூல் ஸொகனு தியாடான் மண்ணென் லிகெ கெனிஸி

119 – ந:ந்நுஹுன்னுக் ஸீகின் நளு ப்ரேவ்க மெனெஸ்
மொர்நுஹுன்னு ஸொகன் லகஸ் மொகொ ஸொன்னுனு,
துமி கொங்க நுஹுன்னு, துர் பாப் – மாய் கோன்?
அமி களல்லன் ஸங்கொ அஸ்கி”

120 – “ஸொம்பு மிஞ்செ நிஷத ஸுராடு நுஹுன்னு அமி
அம்பாக் ஹாத் ஸொட்டி அரண்யும் – ஹெபுதொ
ஜேடியோ, அய்ன் கொம்மொ ஜிவராஸ் அமி, பிரி ஸானா
ரீ:டியோ, வீதி லிகிரிய ரேகொ

121 – தொளாம் பனி பொரெஸ் நளகு, துகிலி மெனெஸி – “ஹோ பாளுனு
தளாம் ம:ழின் ஹீரும் அவி ஸம்டி ஜிவத்தெகி போளுனு?
களாம் வெக்ள ரெங்கு அவி கவ்லாய்கீ? தக்கிலெ பிதாகெ
பளாம் ஒக விரோதி அபுல் பாஞ்ய் தொவத்தெகீ காளுனு?”

122 – “வத்தொ வேன் கெருங்கொ வகொ நீ:ஸ்தக், புலகுர்
ஸெத்துக் மெஞ்செ தெரும் ஸேகீ? – வத்தொ
வேன் கெரெய களயெத் வீருன் ஸிக்ஷொ தீடன்,
கான் களானா கேர் காம்”

123 – ஸகி அவி சலெயொ ஸங்கிஸ், நிஜம் மொன்னுக்
லகி தமயந்திக் லயெஸ் – “மெகி
ரூப் ஸிங்கிரியொ ககொ?’ ருவ்வ கெடிம் பித்தர் ஜீ
பாப் ஜோள் ஸங்கிஸ் பரித்.

124 – ஸொந்தும் துங்கெ பீம் அஸன் ஸொட்டி ஹுடெஸி, தர்பாரும்
பந்து ஜெனுலுன் ஸெராபடி பாதுஸாலாக் ஜியெஸ் சூரும்
நந்தி ஆலிங்கனு கர்லிகின் நளு ஜோள் மெனெஸ் – “வருன்
லெந்த அபுல் ஸ்வருப் அத்தொ லீலெ, அமி கெரெ போள் பூரும்”

125 – நாகரஜொ தியெ வஸ்தர் நளுபில்லியெ வேளுன்
ஸொக கிரால் அஸ்கி ஸுட்டெஸ் – பாக
ஹந்தய்து ரூப் ஒண்டெ ஹத்து கடிம் ஜீ மா
விந்தய்து ரூப் அவெஸ் வெதுர்.

126 – ஸொம்பும் தொளாம் பனி ஸொள்ளேத் தமயந்தி
அம்புலா பாய்ந்தொ பொடிஸ் அவி – இன்பும்
தேவுன் பூல் சொல்யாஸ், ஸெனிபகவான் மெள்ளொ
மேவுன் வருன் மய்லே மெனெஸ்

127 – “மொர் கெதொ இகி அய்கரிய மொ:ட்டானுக் ஸந்த்தினுக் மெள்ளி
தொர் ஜெதொ கெஷ்டம் தீகின் தொரஹோனா கொப்பிம் பெள்ளி
ஹோர் ஜெலும் சொகட் அவ்னொ ஹோருகு” மெனெஸ் நளு வந்தினு
’தெர் கள்ளே தியேஸ்’ மெனி வரு தியெஸ் ஸெனி ஸந்துஷ்டிம் புள்ளி

128 – ஸஸராட் காவ்யுன் பொரெ ஸவ்ராஷ்ட்ர பாஷொ ஸொகன்
ஸொஸுரா காம் பஸ்கட் ஸொட்டி – திஸுலாம்
நு:ருன் பெய்ல் ஸெர நளு நுவத்திஸொ அவி செரெஸ்
சுரும் அபுல் தேஷுக் சொககட்

129 – ததொ புஷ்கரு தேகவெஸ் தர்ம நியதி ஜல்லிகினு
ஜதொ கிரிடி கலெஸ் ஜவ்ணாக் – ஹெதொ
திரெஸ் நிஷத ஜெனுலுக், தேஜஸ் பொரி ராஜ்ஜி
கெரெஸ் நளரஜொ கீர்திம்.

130 – வேத விஸ்தார் கெரெ மஹரிஷி வ்யாஸ பகவான் ஸங்கேஸ் இஸொ
கீத காவ்யு அய்கெ யுதிஷ்டிரு கிராலு ஸக்தி ஜல்லியெஸ் திஸொ
பாதொ திரெஸி பாரத தேஷுகு பகவத் க்ருபொ பொரெஸி, கொப்பிம்
நாத ப்ரஹ்ம நராய்ணுக் நொமி நடனம் களொ, கவொ, அஸொ

கலி ஸுட்டெ ஸர்கு முஸேஸ்
நளத3மயந்தி – காவ்யு முஸேஸ்


8. கலி ஸுட்டெ ஸர்கு
8. கலி நீங்கு படலம்
116 – ஹந்தவு அவாரும் நளு ஹவ்ளார் ஜீ செல்லியெஸ்
ஸெந்தெவ்க கொன்னி ஸியான் – ரு:ந்தெஸி
தாம் தாம்மு பஜெய தந்து சிஸ்லொ ரஸ்லொ
ஸோம் ஸோவு மெளெ ஸொகன்

சமயலறையில் சாதரணமாக வந்தடைந்தான் யாரும்
சந்தேகபட்டு பார்க்கவில்லை – படர்ந்தது
இல்லாதிருந்த பாண்டங்கள் வேண்டிய தானியங்களால்
நிறம்பின தேவலோகத்தில் கற்பக மரத்தடி போல்

117 – ஓடு களல்லன் தெரி உலாஸ்க ஸகி ஸெரொ
தேடவெ ஜணளி ஸெவ்கின் – காடும்
ஜல்லிஸ் ர:த்தத்தொ தமயந்தி ஜொவள் ஜீ
மெல்லிஸி சொகட்வேள் மெனி

மாலையில் உல்லாச உலா வந்த தோழியருடன்
அங்குவந்த இளவரிசியின் சேவகியர் – நொடிகளில்
அறிந்தனர் உடனே தமயந்தியிடம் சென்றி
நல் வேளை வந்ததென அறிவித்தனர்
118 – நொவ்வக அவ்ரிய ஹந்தய்துகு நு:ருனுக் தட்டி ஸி அவெஒ மெனிஸி
ஸொவ்வள் தின்னுகன் தொளாம்பனி ஸொடி ஸொடி தமயந்தி ஸினிஸி
ஜொவ்வள் அவெய நு:ருனுக் ஸீ ஜுன்ன ஹட்வனும் நளு புடெஸி
தொவ்வள் புலெஸ் பூல் ஸொகனு தியாடான் மண்ணென் லிகெ கெனிஸி

புதிதாக வந்த மடைபள்ளியாள் முன் குழந்தைகளை அனுப்பினர்
பதினாறு நாட்கள் கண்கள் குளமாக இருந்த தமயந்தி சோர்ந்தாள்
அருகில் வந்த குழந்தைகளை கண்டு நினைவுகளில் மூழ்கினான்
மருமில் மலர்ந்தான் மலரைபோல் தாடா சுப்ரமணியன் எழுதிய கதை

119 – ந:ந்நுஹுன்னுக் ஸீகின் நளு ப்ரேவ்க மெனெஸ்
மொர்நுஹுன்னு ஸொகன் லகஸ் மொகொ ஸொன்னுனு,
துமி கொங்க நுஹுன்னு, துர் பாப் – மாய் கோன்?
அமி களல்லன் ஸங்கொ அஸ்கி”

குழந்தைகளை கண்ட நளன் வாஞ்சையுடன் கேட்டான்
என் மக்களை போல் உள்ளதே என் செல்லங்களே
நிம் யார் மக்கள் – உம் தந்தை – தாய் யாவர்?
யாம் அறியும்படி கூறுக எல்லாம்

120 – “ஸொம்பு மிஞ்செ நிஷத ஸுராடு நுஹுன்னு அமி
அம்பாக் ஹாத் ஸொட்டி அரண்யும் – ஹெபுதொ
ஜேடியோ, அய்ன் கொம்மொ ஜிவராஸ் அமி, பிரி ஸானா
ரீ:டியோ, வீதி லிகிரிய ரேகொ

போகத்தை மிஞ்சிய நிடத நாட்டு மன்னனின் மக்கள் நாம்
தாயை கைவிட்டு அடர்வனத்தில் தவிக்கவிட்டு
சென்றுவிட்டான், பாட்டன் வீட்டில் வாழ்கின்றோம் பாரமல்
இருந்துவிட்டான் விதி எழுதிய கோட்படி

121 – தொளாம் பனி பொரெஸ் நளகு, துகிலி மெனெஸி – “ஹோ பாளுனு
தளாம் ம:ழின் ஹீரும் அவி ஸம்டி ஜிவத்தெகி போளுனு?
களாம் வெக்ள ரெங்கு அவி கவ்லாய்கீ? தக்கிலெ பிதாகெ
பளாம் ஒக விரோதி அபுல் பாஞ்ய் தொவத்தெகீ காளுனு?”

நளன் கண்கள் குளமாகியது, வாரியணைத்து கூறலானா “மக்களே
குளத்து மீன்கள் கிணற்றில் அடைத்து வாழ்வது இம்மையோ?
கார் வண்ணத்தில் வேறு வண்ணம் சேருமோ? கோழை தந்தையின்
நாட்டில் ஒரு எதிரி கால் வைப்பது எவ்வித நீதி

122 – “வத்தொ வேன் கெருங்கொ வகொ நீ:ஸ்தக், புலகுர்
ஸெத்துக் மெஞ்செ தெரும் ஸேகீ? – வத்தொ
வேன் கெரெய களயெத் வீருன் ஸிக்ஷொ தீடன்,
கான் களானா கேர் காம்”
”வார்த்தைகளை சுருக்குவாய், இல்லையெனில் உலகில்
வாய்மைக்கு நிகர் அறமுண்டோ? – வார்த்தைகளை
அதிகம் தெளித்ததை அறிந்தால் வீரர்கள் தகுந்த பாடம் கற்பிப்பர்
அனைத்தையும் விட்டு வேலையில் முனைப்பாய்

123 – ஸகி அவி சலெயொ ஸங்கிஸ், நிஜம் மொன்னுக்
லகி தமயந்திக் லயெஸ் – “மெகி
ரூப் ஸிங்கிரியொ ககொ?’ ருவ்வ கெடிம் பித்தர் ஜீ
பாப் ஜோள் ஸங்கிஸ் பரித்.

தோழியர் வந்து நடந்தவைகளை சொல்லினர், உண்மை மனதில்
ஏறியதை தமயந்தி உணர்ந்தனள் – எனில்
உருவம் மாறியதன் காரணம்? தந்தையிடம் சொன்னாள்
மருமில் தாம் பெற்ற சேதியை

124 – ஸொந்தும் துங்கெ பீம் அஸன் ஸொட்டி ஹுடெஸி, தர்பாரும்
பந்து ஜெனுலுன் ஸெராபடி பாதுஸாலாக் ஜியெஸ் சூரும்
நந்தி ஆலிங்கனு கர்லிகின் நளு ஜோள் மெனெஸ் – “வருன்
லெந்த அபுல் ஸ்வருப் அத்தொ லீலெ, அமி கெரெ போள் பூரும்”

மகிழ்ச்சியில் குதித்த வீமன் இருக்கையிலிருந்து எழுந்தான், அவையில்
பரிவாரங்களுடன் மடப்பள்ளி நோக்கி சென்றான் விரைந்து
வாழ்த்தி தழுவி நளனிடம் கேட்டான் – “இக்கணமே உன்
சொந்த உருவம் தரிப்பாய், எம் முன் வினைகளை தீர்ப்பாய் விரைந்து”

125 – நாகரஜொ தியெ வஸ்தர் நளுபில்லியெ வேளுன்
ஸொக கிரால் அஸ்கி ஸுட்டெஸ் – பாக
ஹந்தய்து ரூப் ஒண்டெ ஹத்து கடிம் ஜீ மா
விந்தய்து ரூப் அவெஸ் வெதுர்.

நாகராஜன் தந்த சாபவிமோசன ஆடைதரித்தான் அக்கணமே
கோள்களின் நீசம் எல்லாம் விலகியது – சமயலறை
பணியாள் உருவம் அரை நொடி பொழுதில் மறைந்து
நிடத மன்னனின் உருவம் தரித்தான்

126 – ஸொம்பும் தொளாம் பனி ஸொள்ளேத் தமயந்தி
அம்புலா பாய்ந்தொ பொடிஸ் அவி – இன்பும்
தேவுன் பூல் சொல்யாஸ், ஸெனிபகவான் மெள்ளொ
மேவுன் வருன் மய்லே மெனெஸ்

மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர்வடித்த தமயந்தி
கணவனில் தாள்பணிந்தாள் வந்து – இன்பத்தில்
தேவர்கள் பூமாரி பொழிய – சனீஸ்வரரும் நின்றர்
கேட்க்கும் வரமளிக்கிறேன் என்றபடி

127 – “மொர் கெதொ இகி அய்கரிய மொ:ட்டானுக் ஸந்த்தினுக் மெள்ளி
தொர் ஜெதொ கெஷ்டம் தீகின் தொரஹோனா கொப்பிம் பெள்ளி
ஹோர் ஜெலும் சொகட் அவ்னொ ஹோருகு” மெனெஸ் நளு வந்தினு
’தெர் கள்ளே தியேஸ்’ மெனி வரு தியெஸ் ஸெனி ஸந்துஷ்டிம் புள்ளி

என்கதையை எழுதி கேட்க்கும் பெரியோரும் அவர் தலைமுறையினரும்
உன்னால் ஏதும் துன்பங்கள் தரபடாமல் என்றும் நல்முறையில்
நற்பிறவி பெறவேண்டும் என்றென்றும்” என்றான் நளன் வணங்கி
”அவ்வாறே ஆகுக” என வரமளித்தான் சனி மகிழ்ந்து.

128 – ஸஸராட் காவ்யுன் பொரெ ஸவ்ராஷ்ட்ர பாஷொ ஸொகன்
ஸொஸுரா காம் பஸ்கட் ஸொட்டி – திஸுலாம்
நு:ருன் பெய்ல் ஸெர நளு நுவத்திஸொ அவி செரெஸ்
சுரும் அபுல் தேஷுக் சொககட்

ஆயிரமாயிரம் காவியங்களை கொண்ட சௌராஷ்ட்ர மொழியினை போல்
மாமனார் நகரை விட்டு நகர்ந்தான் – பொழுது புலவதர்க்குள்
மக்கள், மஹாராணியுடன் நளன் நிட்தத்தை அடைந்தனன்
என்றும் மக்கள் செய்த புண்ணியப்படி

129 – ததொ புஷ்கரு தேகவெஸ் தர்ம நியதி ஜல்லிகினு
ஜதொ கிரிடி கலெஸ் ஜவ்ணாக் – ஹெதொ
திரெஸ் நிஷத ஜெனுலுக், தேஜஸ் பொரி ராஜ்ஜி
கெரெஸ் நளரஜொ கீர்திம்.

அண்ணன் புட்கரன் தான் கற்ற தர்ம நியமங்களை அறிந்து
கோல், முடியளித்தான் தன் இளவலுக்கு – துன்பம்
தீர்ந்தது நிடத நாட்டுமக்களுக்கு, தேஜஸ் நிரம்பி
நாடாண்டான் நளன் மன்னன்

130 – வேத விஸ்தார் கெரெ மஹரிஷி வ்யாஸ பகவான் ஸங்கேஸ் இஸொ
கீத காவ்யு அய்கெ யுதிஷ்டிரு கிராலு ஸக்தி ஜல்லியெஸ் திஸொ
பாதொ திரெஸி பாரத தேஷுகு பகவத் க்ருபொ பொரெஸி, கொப்பிம்
நாத ப்ரஹ்ம நராய்ணுக் நொமி நடனம் களொ, கவொ, அஸொ

வேத வியாசம் செய்த மஹரிஷி வியசர் இவ்வாறு கூற
கீத காவியம் கேட்ட தருமன் கோள் வலிமையை அறிந்தனன்
துன்பம் தீர்ந்தது பாரத தேசத்தில், பகவத கருணை நிரம்பிற்று
என்றும் நாரயணனை பாடி, ஆடி மகிழ்வோம் வாழ்ந்து

கலி ஸுட்டெ ஸர்கு முஸேஸ்
கலி நீங்கு படலம் சுபம்
நளத3மயந்தி – காவ்யு முஸேஸ்
நளதமயந்தி காவியம் சுபம்


இதுகாரும் யாம் பதித்து வந்த நளதமயந்தி - ஐயா சௌராஷ்ட்ர கம்பர் “தாடா - சுப்ரமண்யம்” அவர்கள் எழுதிய சௌராஷ்ட்ர காவியமும், ராஜா ரவிவர்மாவின் தூரிகை தீட்டிய படங்களும் முற்றுப்பெறுகிறது. இப்பதிவு தொடர் அவர்கள் இருவருக்கும் சமர்பணம்.











நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7
நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 8

இக்கதையை படித்தவர்கள், படிப்பவர்கள் அனைவருக்கும் சனீஸ்வரரின் அருள் கிடைக்கும் என இக்கதையின் ஆசிரியர் கூறியுள்ளனர்! படித்து பயன் பெறுக. குற்றம் குறையேனும் இருப்பின் பொருத்தருள்க

நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 8




7. பாகஸாலா ஸர்கு

100 – ஹத்து ராதிம் பெய்லு ஸவ்லொ ஹத்து படி பில்லிகினு
ம:த்தி ராணும் ஸொட்டி லாஸும் மான் ஒங்கள்ளி ஜியெஸி
ஸுத்த வீருடு நிஷத ரஜொ! ஸொளொஹோத்த முல்லொ
அத்திக் ராணும் லகெ ஹுளொ அகாஷ் லந்தரியொ ஸியெஸி

101 – கபாட் கபாட் மெனி கள ஸாப் ஒகெயொ
பவாட் தயெஸி பணொ துக்கி – திவாட்
ஜெயெய நளுடுக் முதுல் ஜெளத்தெ அக்னி வரம்
தெயெய ஹட்வனவெஸ் தெரும்

102 – ஹுளாம்ரீ: ஸாபுக் ஹெடி ஹோர் தகிலி துஸுரெ
பளாம் பொல்ஜியெஸ் பராது.-“தளாம்
தஸொ மெல்லேத் மொகொ தாய் மெனெஸி ஸாபு
திஸொ கெரெஸி நளுடு தெவள்

103 – தில்ல வேளும் மெளாது தெவு க்ருபொ ரி;யெதி
பல்லொ அவத்தெ துக்கு பனி ஸொகனு தமி ஜாய்
ஒல்ல பொட்டர் கெளொ ஒங்கடி ஸெனி கடெதினு
முல்லொ கரெ தெருமுன் முதிரி அவி பொடய் பாஞ்ய்

104 – தஸெஸி ஸாபு, கெடிம் தமயந்தி பதிகு ஸிங்கார்
நஜெஸி ஆங்கு ந:ன்ன ஹோய் – புஸெஸி
“கபடெத்தெகொ விஸ்வாஸ் களத்த்தெ இஸொகீ, புன்னு
அபடத்தெ கோனகு அங்குன்?”

105 – “ரூப் ஸிங்கில்லி தூ ரொவ்வதி ர:னொ ஹாலிம்
ஜீப்லெந்த கோஸ் தெரெயொ” – ஸாப்
ஸங்கேஸ் “ருதுபர்ணுக் ரதஸாரதிக தின்னு சல்வி
முங்குஸ் ஸொன் வாக் மெள்ளி

106 – ஸான் தகெய வஸ்தர் தீ ஸாப் நளுடுக் ஸங்கெஸி
நாந்தி தொவத் எல்யொ, ந:ன்பாஹுர் கல்லியெதி
ஹூன் தீஸ் ஸோன் ஆங்கு ஹொள்ளய், தெக பராது
ஸாந்தி பொந்துவாய், மீ ஸங்கெ தானுக் சல்லியெதி

107 – நாகராஜொ ஸங்கெ தானு நளு அயோத்திக் நிக்ளெஸ்
பாகஸாலாம் செரெஸ் பல்சொ – லோகும்
தேவுக் நொம்மெத் அவெ தில்ல கிரால் ஜேடய்
ஜீவுக் ஜிவ்னமுக் ஜெயம்

108 – பாது பொண்ணமு ருசி பரம அமுர்துக லகி
ஸாது மெனி நதெ ஸம்ராட் – யோதி
ரெத்து சல்வத்தக் ரி:யெத்தெனொ நீ:த்தக்
சித்து சிந்தாம் திரெஸ்

109 – ஸமசார் களயெ நளுடு ஸம்ராட் ஜொவள் அவிகினு
நம(ஸ்)கார் கெர்தி மெனெஸி – “ந:ன்னகாம் யே மீ கெருஸு.
மமகார் நீ:, மெகி இயெ மாவிந்த ப்ரஜாக் ரத்கொ
தமதோர் ஸாஸ்தர் களாய், தைர்யுக லகாம் தெருஸு



110 – விதர்பு தொகன் த்யே வேளும் ஒக பவணு
’அகர்மு’ மெல்லேத் அவெஸி – “ஸுதர்மு
ஸொட்டிகின் தமயந்தி ஸுயம்வரு பிர் ஒண்டாள்
தட்டிகின் கெல்லன் ஜாஸு”

111 – அய்கெ வேளும் நளுக் அடு போடும் பிடுக்!
சிவ்கெஸ், புத்தி செதிரெஸ். – தெவ்கெஸ்
மொடொ ஹொயி ஜீவ் மூஸ்ல் லயி ஹாதும்
கொடொ தெல்லிகினு குங்கி.

112 – பீம ரஜாகு ஏகமாத்ர பெடிகு ரூப் ஸிங்கார் ஹவ்டிலி
ஸீமு தேஷு ரஜானஸ்கி ஸெணம் அவ்டன் ஆஸெ ஹொடிலி
காம வேகும் அயோத்தி ரஜொ கடாஞொ தயெஸி – “ஹே ஸாரதி
ஜாம வேளாம் ஜீ செர்னொ, ஜல்தி ஹுடி ரெத்து தொவ்டிலி”

113 – வேள்கீ, மொகவெ விதிகீ, ஸெக்காத்திஸா
கேள்கீ ஸெனி கெர்ரியொ. – போள்கீ,
மொகொ வெக்கத்தக் மொ:ட்டிகு ஹுபாவ்கீ,
சொகொ ஜயெங்கன் சூரும்.

114 – அய்கயெனி ரஜாகெ ஆக்ஞொ, நளுக் வெதுர்
தெக்கயெனி வெக்ள த்ருஷ்யு – ர:க்கயெனி,
தொளொ மிஸ்குனாத்தக் தொவ்டெஸ் ரெத்து, தின்னு
ஸொளொ ஹொத்தக்கி ஸொடென்


115 – அட்ச ஹ்ருதய வித்யொ அயொத்தி ரஜொ ஸிக்கடெஸ்
பட்சி ரத ஸாரத்யம் படன் கரி நளு தெக்கடெஸ்
துச்ச ஹட்வன் ஸொட்டி தூர் தமெஸி ஸெனி, பிர்
ஹெச்சுகன் கிரால்லெந்த ஹிதவு ஜீவ்யம் லிக்கடெஸ்

பாகஸாலா ஸர்கு முஸேஸ்


7. பாகஸாலா ஸர்கு
7. சமயலறை படலம்
100 – ஹத்து ராதிம் பெய்லு ஸவ்லொ ஹத்து படி பில்லிகினு
ம:த்தி ராணும் ஸொட்டி லாஸும் மான் ஒங்கள்ளி ஜியெஸி
ஸுத்த வீருடு நிஷத ரஜொ! ஸொளொஹோத்த முல்லொ
அத்திக் ராணும் லகெ ஹுளொ அகாஷ் லந்தரியொ ஸியெஸி

நடு நசி மனைவின் சேலை நடுவை பிரித்து உடுத்தியவன்
நடு வனத்தில் விட்டு வெட்கி, தலைகவிழ்ந்து செல்கிறான்
சுத்த வீரன் நிடத மன்னன்; கீழ்வானம் சிவக்கும் முன்
நித்திய வனத்தில் பற்றிய தீ வான் முட்டுவதை கண்டான்

101 – கபாட் கபாட் மெனி கள ஸாப் ஒகெயொ
பவாட் தயெஸி பணொ துக்கி – திவாட்
ஜெயெய நளுடுக் முதுல் ஜெளத்தெ அக்னி வரம்
தெயெய ஹட்வனவெஸ் தெரும்

காப்பாற்று! காப்பாற்று! என கருநாகம் ஒன்று
கூச்சலிட்டது தன் படத்தை உயர்த்தி – அவ்வழியே
சென்ற நளன் மனதில் முன்னம் பெற்ற அக்னி வரம்
ஞாபகபடுத்தினான் தம் அறம் வளர்க்க

102 – ஹுளாம்ரீ: ஸாபுக் ஹெடி ஹோர் தகிலி துஸுரெ
பளாம் பொல்ஜியெஸ் பராது.-“தளாம்
தஸொ மெல்லேத் மொகொ தாய் மெனெஸி ஸாபு
திஸொ கெரெஸி நளுடு தெவள்

நெருப்பிலிருந்து பாம்பினை தம் மீது அமர்த்தி வேறு
பகுதியில் எடுத்துசென்றான் பிறகு – குளத்தில்
தசம் என்றபடியே என்னை சேர்ப்பாய் என்றது நாகம்
செய்தான் அப்படியே நளனும் அப்போது

103 – தில்ல வேளும் மெளாது தெவு க்ருபொ ரி;யெதி
பல்லொ அவத்தெ துக்கு பனி ஸொகனு தமி ஜாய்
ஒல்ல பொட்டர் கெளொ ஒங்கடி ஸெனி கடெதினு
முல்லொ கரெ தெருமுன் முதிரி அவி பொடய் பாஞ்ய்

துன்பகாலத்திலும் கடவுள் கருணை இருந்துவிட்டால்
பிற்குவரும் துன்பங்கள், பனி போல் ஓடிடுமே
ஈரதுணியுடன் கழுத்தை சனி அறுத்தாலும்
முன் செய்த நல்வினைகள் முற்றி வந்து காலில் விழும்


104 – தஸெஸி ஸாபு, கெடிம் தமயந்தி பதிகு ஸிங்கார்
நஜெஸி ஆங்கு ந:ன்ன ஹோய் – புஸெஸி
“கபடெத்தெகொ விஸ்வாஸ் களடத்தெ இஸொகீ, புன்னு
அபடத்தெ கோனகு அங்குன்?”

(தசம் என்றால் வடமொழியில் கடி என பொருள்)
கடித்தது பாம்பு அஞ்ஞனமே தமயந்தியின் பதியின் அழகு
கருத்தது உடல் சிறுத்து விட்டது – கேட்கலானான்
“அபயம் அளித்தவனுக்கு தெரிவிக்கும் நன்றி இப்படியா?
புண்ணியம் அளிப்பது எவ்வாறு இனி?

105 – “ரூப் ஸிங்கில்லி தூ ரொவ்வதி ர:னொ ஹாலிம்
ஜீப்லெந்த கோஸ் தெரெயொ” – ஸாப்
ஸங்கேஸ் “ருதுபர்ணுக் ரதஸாரதிக தின்னு சல்வி
முங்குஸ் ஸொன் வாக் மெள்ளி

உருவம் மாற்றி நீ சில நாட்கள் இருக்க வேண்டியதால்
நாவினால் சற்றே தொட்டேன் – நாகம்
உரைத்தது “ருது பர்ணனின் தேரோட்டியாக இருந்துவர
நன்மை என்றது வாக்களித்து


106 – ஸான் தகெய வஸ்தர் தீ ஸாப் நளுடுக் ஸங்கெஸி
நாந்தி தொவத் எல்யொ, ந:ன்பாஹுர் கல்லியெதி
ஹூன் தீஸ் ஸோன் ஆங்கு ஹொள்ளய், தெக பராது
ஸாந்தி பொந்துவாய், மீ ஸங்கெ தானுக் சல்லியெதி

காணதகுந்த ஒரு ஆடையை தந்து நாகம் கூறியது
உன்மெல் வைத்து கொண்டு; தின்னமாய் அணிந்து கொள்ள
பகல் வெயில் போல் உடல் வெளிறும், அதன் பின்
இன்பம் பெறலாமே, என் உரைபடி நடந்து கொண்டால்

107 – நாகராஜொ ஸங்கெ தானு நளு அயோத்திக் நிக்ளெஸ்
பாகஸாலாம் செரெஸ் பல்சொ – லோகும்
தேவுக் நொம்மெத் அவெ தில்ல கிரால் ஜேடய்
ஜீவுக் ஜிவ்னமுக் ஜெயம்

நாகராஜன் கூற்றுப்படி நளன் அயோத்தி புறபட்டான்
சமயலறையில் சேர்ந்தான் பிறகு – உலகில்
கடவுளை நம்பினால் வந்த வினை தீர்ந்திடுமே
உயிருக்கு வாழ்க்கையில் வெற்றி

108 – பாது பொண்ணமு ருசி பரம அமுர்துக லகி
ஸாது மெனி நந்தெ ஸம்ராட் – யோதி
ரெத்து சல்வத்தக் ரி:யெத்தெனொ நீ:த்தக்
சித்து சிந்தாம் திரெஸ்

அன்ன பதார்த்தத்தின் ருசி தேவாமிருதமாக எண்ணி
கொண்டாடினான் மன்னன் பண்டிதனென்று – ஒருநாள்
தன் தேரோட்டியக இருந்தவனை காணாமல்
அதிக கவலையடைந்து இருந்தான்

109 – ஸமசார் களயெ நளுடு ஸம்ராட் ஜொவள் அவிகினு
நம(ஸ்)கார் கெர்தி மெனெஸி – “ந:ன்னகாம் யே மீ கெருஸு.
மமகார் நீ:, மெகி இயெ மாவிந்த ப்ரஜாக் ரத்கொ
தமதோர் ஸாஸ்தர் களாய், தைர்யுக லகாம் தெருஸு

செய்தி அறிந்த நலன் மன்ன்ன் முன் வந்து
வணக்கம் தெரிவித்தான் – “சிறு வேலை இதை நான் செய்கிறேன்
என் சொந்தம் வேறில்லை; இந்த மஹாராஜிய மக்கள் இருக்கும்
என் உறவாய் சாத்திரம் அறிந்தவன், கடிவாளத்தை ஏற்கிறேன்

110 – விதர்பு தொகன் த்யே வேளும் ஒக பவணு
’அதர்மு’ மெல்லேத் அவெஸி – “ஸுதர்மு
ஸொட்டிகின் தமயந்தி ஸுயம்வரு பிர் ஒண்டாள்
தட்டிகின் கெல்லன் ஜாஸு”
விதர்பத்தின் வழி அவ்வேளையில் அங்கு ஓர் அந்தணன்
அதர்ம்ம் என்றபடி வந்தான் –தர்மத்தை
விட்டு தமயந்திக்கு இன்னுமோர் சுயம்வரம்
செய்வித்து அடைகிறான் இன்பம்

111 – அய்கெ வேளும் நளுக் அடு போடும் பிடுக்!
சிவ்கெஸ், புத்தி செதிரெஸ். – தெவ்கெஸ்
மொடொ ஹொயி ஜீவ் மூஸ்ல் லயி ஹாதும்
கொடொ தெல்லிகினு குங்கி.

இதை கேட்ட மாத்திரமே நளனின் அடிவயிறு கலங்கியது
ஆக்கையை விட்டான், வெளிரினான் – இறைகருணை
பெரிதாகி உயிரை காத்து மயங்கி குதிரையை
பற்றி நின்றனன் விழாமல்

112 – பீம ரஜாகு ஏகமாத்ர பெடிகு ரூப் ஸிங்கார் ஹவ்டிலி
ஸீமு தேஷு ரஜானஸ்கி ஸெணம் அவ்டன் ஆஸெ ஹொடிலி
காம வேகும் அயோத்தி ரஜொ கடாஞொ தயெஸி – “ஹே ஸாரதி
ஜாம வேளாம் ஜீ செர்னொ, ஜல்தி ஹுடி ரெத்து தொவ்டிலி”

பீம ராஜானின் செல்வ மகளின் அழகில் பெருகி
ஞால ராஜிய மன்னர்கள் எல்லாம் விரைந்து வந்துவிடுவர்
காம வேகத்தில் அயோத்தி மன்னன் ஆணை பிறபித்தான் – தேரோட்டியே
நடுநிசிக்குள் அடைந்திடவேண்டும், விரைந்து தேரை செலுத்துவாய்”

113 – வேள்கீ, மொகவெ விதிகீ, ஸெக்காத்திஸா
கேள்கீ ஸெனி கெர்ரியொ. – போள்கீ,
மொகொ வெக்கத்தக் மொ:ட்டிகு ஹுபாவ்கீ,
சொகொ ஜயெங்கன் சூரும்.

கோளோ எனக்கு வந்த விதியோ, தாங்க தகுந்த
விளையாட்டை சனி செய்கிறதோ – வினையோ
என்னை தேடுகின்ற பெரியவனொ, சுபாவமோ
சரி செல்வோம் விரைந்து.

114 – அய்கயெனி ரஜாகெ ஆக்ஞொ, நளுக் வெதுர்
தெக்கயெனி வெக்ள த்ருஷ்யு – ர:க்கயெனி,
தொளொ மிஸ்குனாத்தக் தொவ்டெஸ் ரெத்து, தின்னு
ஸொளொ ஹொத்தக்கி ஸொடென்

மன்னனின் ஆணை கேட்கவில்லை, நளனுக்கு
தெரியவில்லை இணைந்துள்ள காட்சிகளை – காத்திருக்கவில்லை
கண்ணிமையாமல் தேரை செலுத்தினான், காலை
விடிவதை பின்னால் தள்ளி
115 – அட்ச ஹ்ருதய வித்யொ அயொத்தி ரஜொ ஸிக்கடெஸ்
பட்சி ரத ஸாரத்யம் படன் கரி நளு தெக்கடெஸ்
துச்ச ஹட்வன் ஸொட்டி தூர் தமெஸி ஸெனி, பிர்
ஹெச்சுகன் கிரால்லெந்த ஹிதவு ஜீவ்யம் லிக்கடெஸ்

அட்ச ஹ்ருதய வித்தையை அயோத்தி மன்ன்ன் கற்றுக்கொடுத்தான்
பட்சி ரத பாண்டித்தியதை கற்றுணர்ந்து செய்துகாட்டினான் நளன்
துச்ச எண்ணங்கள் விட்டு தூர விலகியது சனி, பின்
உச்ச பலம் பெற்ற கோள்கள் எழுதியது நல் வாழ்க்கையை

பாகஸாலா ஸர்கு முஸேஸ்
சமயலறை படலம் சுபம்


நளதமயந்தி (சௌராஷ்ட்ரத்தில்) # 7