

எத்தனையோ பதிவுகள், எத்தனையோ வேலைகளுக்கிடையில் செய்துள்ளேன். ஆனாலும் என் மனம் ஏனோ மதுரை சுற்றி சுற்றி தான் வரும். எதாவது ஒரு பக்கம் என் மதுரை பற்றிய செய்தி எப்போதும் இல்லாமல் இருக்காது.
அப்படிப்பட்டவனை தூக்கி வீசி எறிந்தால் எப்படி இருக்கும்? அது தான் ஆனது.
நான் தமிழகம் விட்டு வராதவன், தென்னகம் விட்டு வந்து தில்லியில் இருந்த சூழ்நிலை. எப்படியோ அம்மனின் அருளுடன் வெற்றியுடன் எந்த வித தீங்கும் இல்லாமல், எந்தவித துர் சம்பவங்கள் ஏற்படாமல் வீடு திரும்புகிறேன்.
விரைவில மதுரையில் சந்திப்போம் பிறகு, சென்னையில் வேலை தேடி பயணம் தொடரும்....
பலவிஷயங்களை கற்றேன், வலையகம் புகுந்தேன், உங்கள் மூலமும் பல விஷயங்களை கற்றேன், கற்று வருகிறேன். கற்ப்பதும், கேட்பதும் உள்ளவரை இந்த உடல் யாருக்கும் வளைய தேவையில்லை என்ற விஷயத்தில் என் தந்தையிடமிருந்து கற்றேன். அதுவே ஒரு தீயாக என்னை பின் தொடர்கிறது.
விரைவு இரயில் போக்குவரத்து மூலம் மதுரை வருகிறேன் அட்டவனை கீழே உள்ளது.
| SNo | Stn Code | Stn Name | Route No. | Arrival Time | Dep. Time | Distance | Day | Remark |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | NZM | நிஜாமுதின் | 1 | Source | 07:25 | 0 | 1 | 29/Aug/2006 |
| 2 | JHS | ஜான்சி சந்திப்பு | 1 | 13:50 | 14:00 | 415 | 1 | 29/Aug/2006 |
| 3 | BPL | போபால் சந்திப்பு | 1 | 18:30 | 18:40 | 705 | 1 | 29/Aug/2006 |
| 4 | NGP | நாக்பூர் | 1 | 00:55 | 01:05 | 1094 | 2 | 30/Aug/2006 |
| 5 | BZA | விஜயவாடா சந்திப்பு | 1 | 11:20 | 11:35 | 1759 | 2 | Train doesn't halt at this station, presently |
| 6 | MSB | சென்னை கடற்கரை | 1 | 18:10 | 18:12 | 2178 | 2 | 30/Aug/2006 |
| 7 | MS | சென்னை எழும்பூர் | 1 | 18:35 | 19:00 | 2183 | 2 | 30/Aug/2006 |
| 8 | TBM | தாம்பரம் | 1 | 19:23 | 19:25 | 2207 | 2 | 30/Aug/2006 |
| 9 | CGL | செங்கல்பட்டு | 1 | 20:05 | 20:07 | 2238 | 2 | Train doesn't halt at this station, presently |
| 10 | VM | விழுப்புரம் சந்திப்பு | 1 | 21:35 | 21:40 | 2341 | 2 | 30/Aug/2006 |
| 11 | VRT | விருதாச்சலம் | 1 | 22:20 | 22:22 | 2395 | 2 | 30/Aug/2006 |
| 12 | ALU | அரியலூர் | 1 | 23:01 | 23:03 | 2449 | 2 | 30/Aug/2006 |
| 13 | TPJ | திருச்சிராப்பள்ளி | 1 | 00:35 | 00:40 | 2519 | 3 | 31/Aug/2006 |
| 14 | DG | திண்டுக்கல் சந்திப்பு | 1 | 02:23 | 02:25 | 2614 | 3 | 31/Aug/2006 |
| 15 | MDU | மதுரை சந்திப்பு | 1 | 03:45 | 00:00 | 2680 | 3 | 31/Aug/2006 |
நன்றி: இந்தியன் இரயில் போக்குவரத்து துறை









































நாயக மன்னர் காலத்தில் பல கோவில்கள் உருவாகப்பட்டன, இன்று அவர்களது பெயர்களை சொல்லும் சான்றுகளாக நிமிர்ந்து நிற்க்கின்றன. அப்பேற்பட்ட கோவில்களுள் ஒன்று ஹயகிரீவர் கோவில். மதுரை கூடலழகர் கோவிலருகில் இருக்கும் இக்கோவில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் இக்கோவில் சிறிதானாலும் இதன் கீர்த்தி பெரிது. மஹாவிஷ்ணுவின் முதல் வடிவம், முதல் அவதாரமாக கருதப்படும் ஹயகிரீவர் தான் திருபதி ஏழுமலையானுக்கு அங்கே இடமளித்தவர் என்று ஸ்ரீநிவாச ஸ்தல புராணம் சொல்கிறது மேலும் அங்கே முதலில் அவருக்குதான் பூஜை வகைகள் செய்யப்படுகின்றன.













