Saturday, August 23, 2008

என் வலைச்சர பதிவுகள் 1 - 4

சுய சரம்.

டிஸ்கி: இதை கொஞ்சம் டீகடை உரையாடல் பாணியில் படித்து பாருங்கள்

அதிகாரி ஆசிரியராராம்யா! என்றபடி பாய் வந்தார்! “வாரும்ங்காணும்” என்று வரவேற்ற ஐயர்! “என்ன பாய், இன்னிக்கி அரசியல் பேச மாட்டேன்னுட்டு என்னமோ ஆரம்பிக்க்றேள்!” என்று வார்த்தை விட பாய் சுறுசுறுப்பானார்!

“அரசியல் இல்லபா! இது வேற உலகத்த பத்தி! பதிவுலகம்ன்னு சொல்லுவாங்கபா! அதுல நடக்க போறத பத்தி தான் சொல்லுறேன்!” “ஓ! அந்த அப்பனும் மகனும் பேரா இருக்குற பதிவர் பத்திதானே சொல்லுறேள்!” “அட கண்டு பிடுச்சிட்டியே! அவர பத்தி தெரியுமாபா?”

“3 வருஷத்துக்கு முன்னாடி ஆபீஸ்ல பொழுது போகாம, கூகுள்ல எதையாவது தேடி போய் படிப்பாராம் அப்பறம், பதிவுகள்ல ஆன்மீக சூப்பரு இருக்காரோன்னோ அவரோட பதிவுகள படிக்க ஆரம்பிச்சு, கொஞ்சம் கொஞ்சமா பதிவுபக்கம் வந்தாராம், அப்பறம், நம்பிக்கை, முத்தமிழ்-ன்னு தமிழ்ல்ல இருக்குற ஒருசில தமிழ் குழுமத்தில் சேர்ந்து எழுத ஆரம்பித்தாராம், பிறகு பதிவுலக டீச்சர் பதிவுகள படிக்கிறது, இனியது கேட்பது, மாதவி பந்தல்ல ஒதுங்குறது, சுப்ரபாதம் கேட்பது, சிலர் வீட்டுக்கு போறது, தேவகோட்டைக்கு போறது, வகுப்பறைக்கு போறது, ஆன்மீகம் அறிவது, காற்று வெளியில உலாவுரது, மழையை இரசிப்பது, சங்கத்து சங்கதிகளை படிப்பது, அதோட தமிழ்மணம் முகர்ரது, தேன் கூட்டை பார்ப்பதுன்னு இருந்தாராம்யா, அப்பறம் ஒருநாள் ஆன்மீக சூப்பருவோட ஒரு பதிவ பார்த்து இவரே மீனாட்சி அம்மன் கோவிலோட ஒரு படபதிவு தொடரும், மதுரை சித்திரை திருவிழா தொடரும், ஞானவெட்டியான் என்ற ஒரு பதிவரின் பதிவுகள படிச்சு சித்தர் பாடல்கள்ன்னு ஒரு வலைபூவும், தன்னோட வேலை பற்றி சொல்ல SAP-பற்றின்னு ஒரு வலைபூவும், மதுரை கோவில்ன்னு ஒரு சில பதிவுகளும் போட்டார், இடையிலே ஒரு சில பாடல்கள யுனிகோட்ல குடுத்தவரு, சௌராஷ்ட்ர திருக்குறளுக்கு ஒரு நல்ல இடத்தை தரனும்ங்கற இவரோட ரொம்பநாள் கனவை, இப்போ பதிவுவழியா யுனிகோட்ல தந்து தாகத்த தீர்த்துகிட்டு இருக்கார், சரிதானே?”

“சரி தான்பா! ஆனா அவர் ஒரு அதிகாரி அது தெரியுமாபா?” “அதுவும் தெரியுங்காணும், அதுமட்டுமில்ல சொத்த பிரிச்சுட்டாளோன்னோ ’ “அண்ணன் தம்பிங்க” அதுல தம்பியோட கடன் தரும் நிருவனத்துல நம்ம அதிகாரி, மனிதவள துறையில் உயரதிகாரியா, வேலை பார்க்குறார்,!” “அட விஷயத்த அப்பிடியே புட்டு வைக்கிறீயேபா.! அதெப்பெடிப்பா கணினி படிச்ச இவர் மனிதவளத்துல வேல பார்க்குறார்?”

“ கொஞ்சநாள் இவர் ஒரு மத்தியஅரசு திட்டத்துல ஒரு மேலதிகாரிக்கு சின்ன லெவல்ல காரியதரிசியா இருந்தாராம், அப்பறம் ஒரு நிறுவனத்துல மனிதவள துறைல உதவியளாரா வேலைபாத்து அப்பிடியே உயர்ந்துட்டாராம்.” “ஆனா அவர் எப்போ ஆசிரியர் ஆனார்! அதை சொல்லுவே! ஒரு சில ட்ரெய்னிங் மாட்யூல் வகுத்து தன்னோட சக-ஊழியர்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்துருக்கார்! ஆனா எப்போ ஆசிரியரானார் அதைக்கொஞ்சம் சொல்லுங்காணும்”

தமிழில் பதிவுகள்ன்னு வர்ர பல பதிவுகள எடுத்துக்காட்டும் வலைச்சரத்துல வாரம் ஒருவர் ஆசிரியாரா இருப்பார்பா!, அதுல நம்ம அதிகாரிய ஆசிரியராக்கனும்ன்னு அந்த பதிவோட பொறுப்பாசிரியர் நினைச்சு இவர அணுகினாராம். இவரும் ஒத்துகிட்டாராம்ய்யா”

“அதெப்படிபா, புதுஸ்ஸா ஒருவேலைய தேடிகிட்டு இருக்கும்போது எப்படி இதுக்கெல்லாம் இவருக்கு நேரம் கெடைக்குது”

“இது ஒரு மாசத்துக்கு முன்னாடியே இதுக்கு சரின்னு சொல்லிட்டு எல்லா பதிவுகளையும் எழுத ஆரம்பிச்சுட்டார்பா!” “அப்பறம் இப்போ தினமும் தன்னோட வீட்டு பக்கதுல இருக்குற ’கபே’ போயி பதிவுகள படிப்பாராம்!” “ஏகமனதா இன்னிக்கு ஆரம்பிக்குறார்”

“என்ன பதிவுகள எழுத போறாராம்?”

“அதை ஏம்பா கேக்குற! ஒன்னுக்குள்ள ஒன்னா, ரொம்ப நெருங்கி இருக்குரவங்களுக்கும் இதைப்பத்தி ஒன்னும் சொல்லலயாம்! ஆனா எனக்கு தெரிஞ்ச வரை தன்னோட நன்பர்களிடம் “ஆறு பதிவு இலட்சியம், மூனு பதிவு நிச்சயம்ன்னு” அண்ணா மாதிரி சொல்லுராம்பா! இது வலைச்சரம்ங்கறதால ஒவ்வொரு நாளும் ஒரு விதமானசரம் இருக்கும்னும் அந்த சரத்தை யாராவது ஒருவருக்கோ ஒரு சாரருக்கு சமர்பணம்ன்னு சொல்லுவார்ன்னு அவரோட நன்பர்கள் நம்புராங்க பா!”

முருகா! சிவ சிவ! என்றபடி எழுந்தார் ஐயர்! “பாய்” மாயமானார்!

தினமும் எல்லா செய்திகளையும் படித்து, விவாதிக்கும் அனைவருக்கும் இன்றைய சரம் சமர்பணம்.


________________________________________________________________________________

ஆன்மீக சரம்

ஒரு குழந்தைக்கு உணவூட்டுவது பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வேலை! அதே குழந்தையை தூங்க வைப்பது அதைவிட பெரியா வேலை! அதை எழுப்ப வேண்டுமெனில்! (ஈஸ்வரா, யோசிச்சாலே தாங்க முடியலை). அதை ரொம்ப எளிதாக இந்த வலையில் நம்ம கே.ஆர்.எஸ். எழுதிருக்கார். முதலில் ஆன்மீகத்திற்க்கு தேவை எழுவது! அதாவது (அஞ்ஞான) தூக்கத்தில் இருந்து துயில் எழுவது.எழுப்ப நம்ம கே.ஆர்.எஸ் துனைக்கு வருகிறார்.


இந்த கலி காலத்துல பாட்டு, நடனமுன்னு ஆடிப்பாடி இருந்தாலே போதும் அது தான் முக்திக்கு வழின்னு பெரியவங்க சொல்லுராங்க, அதை நம்ம பதிவர்கள் எப்படியோ கண்டுபிடிச்சி, ஒரு சில குழுபதிவா இயங்கிவருகின்றனர்.

அதில் கண்ணனுக்கு ஒரு பதிவுண்டு அதில் எல்லா பதிவுகளும் அருமையாக அதுவும் ஒரு சில புதிய பாடல்களும் மேலும் ஒரு சில என்றும் இனிக்கும் பாடல்களும் உள்ளன.

என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
சயனத்தில் ஆதி சேஷன் மேலே
திருவடி திருமகள் மடி மேலே

இப்படி பாடல்கள் பல. உருகி உருகி பாடும் பாடகர்களை கேட்டாலே நம் பாவங்கள் எல்லாம் உருகிவிடும்.

அதே போல் முக்கண்ணனுக்கும், முருகனுக்கும் (சிவமுருகன்ன்னு ஒரே வார்த்தையா சொல்லிடவ?) தனித்தனியாக இருகுழுப் பதிவுகள் உள்ளன

"கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா!
சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா!
நின் தாள் துணை நீ தா!"

என்பதையும்

"முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா"

என்றபாடலையும் கேட்டால், சைவம் பற்றி அறியாதவரும் இதில் சிந்தைவையபட்டு விடுவர்.

மேலும் அம்ம(மா)னுக்கும் ஒரு பதிவு வச்சிருக்காங்க, கற்பூர நாயகியே கனவலில்லின்னு பேரு உள்ள போயி பார்த்தா மாரியாத்தா முதல் மதுரை அரசாளும் மீனாட்சி வரை எல்லாரும் அருளுகின்றனர்.

படித்து பாடி பரவச பட அந்தந்த பதிவுகள பார்த்தீங்கன தெரியும்.

மேலும் பலர் தங்களின் ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு தள(ல)ம். ஆச்சார்ய ஹ்ருதம்.

சமர்பணம் : ஆன்மீக உலகில் பவனி வரும் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.




________________________________________________________________________________

நகைச் சுவை சரம்

மீண்டும் பெஞ்ச் சூடிபிடித்தது! "என்னவே! என்னோவோ ஒரு வாரம் எழுத போனார் திரும்பிடலாமான்னு யோசிக்கிறாரோ?" என்றார் டீக்கடையில் இருந்த ஐயார் " "என்ன சங்கதி" என்றபடி பாய் அருகில் சாமியும், அண்ணாவும் அமர்ந்தனர். "அதொன்னும் இல்லபா ஒரு பதிவர் பத்தி ரெண்டு நாளுக்கு முன்னால பேசுனோம் அதுல ஒன்னும் அவ்வளவா பெருஸ்ஸா இல்லபா!" "பெருசா இல்லாமலா பேசுனீங்க! இப்ப சொல்றீங்களா இல்லையா" என்று அதட்டினார் சாமி.
"ஒவ்வொருநாளும் ஒரு பதிவா போடலாம்ன்னு இருந்த கதையா?" என்று அண்ணா வார்த்தையை விட! "அதே தாம்பா!" என்று பாய், துள்ளாத குறையாக கத்தினார். "அதொன்னும் இல்ல ராசா! நேத்து இவர் வழக்கமா ஒரு கபேக்கு போயி டைப் அடிப்பாராம் நேத்து பெங்களூர் ரிலையன்ஸ்ல ஏதோ கோளாராம் அதான் போயி டைப் அடிக்க முடியலையாம்! நாளைய சங்கதிய கேளும்"

"இடுக்கண் வருங்கால் நகுக சொன்னாருல வள்ளுவர்! அத வச்சுக்கிட்டு விளையாடலாம்ன்னு நினைக்குறாராம் இந்த பதிவர்." "அப்போ சங்கத்து சிங்கங்களை பற்றி சொல்லுவார்ங்றீரா" என்று ஐயர் கொஞ்சம் சீரியஸாக! "கண்டிப்பா அது தானே இவர் கலாய்க்க கத்துக்கிட்ட இடம். இன்னிக்கி இவரோட சுற்றுவட்டம் சிரிக்குதுன்னு அதுக்கு இந்த சங்கம் பெரிய பங்குண்டு." என்று சாமி முடிக்க. பாய் தொடர்ந்தார்

"அப்பறம் யோசிபவரோட லொள்ளுல நனைவிடுவார்பா!" "அவரோட ஒரு சில பதிவுகளையும் குறிப்பிட்டு சொல்லுவாராம்." என்று பாய் சற்று மூச்சு வாங்குவதற்க்குள் "அதானவே அந்த இளைஞனோட காதலி, அவரோட குருஞ்செய்தி அதத்தானே சொல்றீரு?" "அட ஆமாப்பா!" என்று பாய் அமைதியானார்.

சமயம் பாத்து அண்ணா அரம்பித்தார்"இதோ பாரும் ஓய் சாதாரணமாக எல்லாம் ஒரு நகைச்சுவைய பத்தி சொல்லிட முடியத்து, இவரோ ஆன்மீக பதிவரு!" என்று முடிப்பதற்க்குள்! "இல்லபா மூணுநாலு நகைச்சுவை பதிவும் போட்டுருக்கார்பா, ஒரு தொடரே கூட எழுதிற்க்கார்பா" என்று பாய் வக்காலத்து வாங்க "ஒத்துக்குறேன்பா இருந்தாலும் அடுத்த அறிமுகமா என்ன போடுவார், அதையும் சொல்லும்!"

"அப்படி கேளு சொல்லுறேன்!" என்ற அண்ணா தொடர்ந்தார் "இவர் ஒருவரோட ஆஸ்தான கமெண்டர்ன்னு பேர் வாங்குனவய்யா!" "யாரு! அந்த குச்சி மிட்டாய் குருவி ரொட்டி எல்லாம் தன்னோட ஆர்குட்ல காட்டுவாரே அந்த மழைக்கு அசராதவர் தானே?" என்று சாமி கண்டுபிடிக்க! உடனே "அதே பிரதாபமான ஆளுதான்யா"என்று உறுதி செய்தார்!

"அப்பறம் ஒரு முக்கியமானவர் இவர் ஒரு காலத்துல தினம் ஒரு பதிவா போடுவார்! காலய்க்கரதுல இவருக்கு நிகர் இவர் தான்னு பதிவரே சொல்லிருக்கார்" "அந்த சுஜாதா கதையில வர்ர ஹீரோ பேர் கொண்டவர்தானே?" என்று அசரிரியாய் சாமி சொல்ல எல்லோரும் திரும்பி அவர்பக்கம் பார்த்தனர்!"


"ஏதோ திரும்பிடலாம்ன்னு வார்த்தை கேட்டுச்சே, அது என்னதுய்யா? " என்று சாமி ப்ளாஷ் பேக்க்குக்கு போக! "அதெல்லாம் ஒன்னுமில்லைபா! சும்மா என்ன எழுதலாம்ன்னும் இவர் யோசிச்சாராம் ஒன்னும் வரததால சரி வித்ட்ரா பண்ணலாமான்னு யோசிச்சாராம், ஆனா ஒன்னும் நடக்கலைபா!" "என்னமோ ஒரு மாசத்துக்கு முன்னாடியே எழுத ஆரம்பிச்சுடதா சொன்னீரு?" என்று தன்னோட ஞாபக சக்தியை ஐயர் காட்ட! "ஆமாபா எழுதி வச்சார் எல்லாம் தன்னோட ஆபீஸ் கணினில ஒரு போல்டர்ல வச்சாராம்! அது இப்போ கணலையாம்! மறுபடியும் டைப்ப ஆரம்பித்து பதிவ தொடர்ந்து போடுவாருன்னு அவரோட நன்பர்கள் சொல்றாங்கபா!" இப்போ எல்லாம் அந்த அலுவலகத்துல செக்யூரிட்டி அதுவும் ஐடி செக்யூரிட்டி பயங்கரமாம்! அதான் இந்த மாயத்துக்கு காரணமா இருக்கலமோன்னு யோசிக்கிறாராம் நம்மவர்.


"சரிப்பா அப்பறம் என்ன எழுதறார்?" என்று மீண்டும் ட்ராக்க்கு கொண்டுவந்தார் சாமி!


"கொஞ்சநாளுக்கு முன்னாடி ரெண்டுன்னு ஒன்னு ஓடிச்சில்ல அதுல ஒரு பதிவு இவர ரொம்பவே சிரிக்க வச்சுதாம். "


"அப்பறம் இவரோட எந்தவொரு நகைச்சுவைபதிவ படிச்சாலும் சிரிப்பாராம்! அதான் இவரோட தனித்துவமாம்" என்று முடித்துக்கொண்டார்.


"அதெப்படிப்பா இவரோ அவர் வராம ஒரு பதிவ எழுதினார்?" என்று நமுட்டு சிரிப்பு சிரித்தப்படி அண்ணா எழுந்திருக்க, மற்றவருக்கும் புரிய எல்லோரும் சிரித்த படியே கிளம்பினர். பெஞ்ச் அமைதியானது.


ஏழாம் சுவையான இந்த நகைச்சுவையை சுவைக்கும், சுவைக்க வைக்கும் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.



__________________________________________________________________________________

படச்சரம்
“என்னவே ரொம்பநாள ஆளக் காணோம்?” என்று புதிதாக வந்த அண்ணாச்சியை கலாத்தார் ஐயர்! “ஆரம்பிச்சுட்டியா? உன்னோட வள்ளலை” என்ற அண்ணாச்சி. பிறகு மெதுவா ஆரம்பித்தார் “ரெண்டு நாளா நான் வராட்டியும் எந்த பாதிப்பில்லாம் நீங்க பாத்துகிறீங்களே அது போதாதா?” என்றபடி எல்லோரையும் ஒரு பெருமித பார்வை பார்த்தார், சாமி, பாய், அண்ணா, ஐயர் எல்லோரும் ஒரு விணாடி குளிர்ந்தனர்.

“இன்னிக்கி என்னாச்சுவே எல்லோரும் என்ன மௌனவிரதமா?” என்று கேட்ட ஐயரை தொடர்ந்து பாய் மொழியலானார்! “இப்படி தாம்பா நடக்குது வேற உலகத்துலையும். சொல்றதையும் எழுதுறதையும் ரொம்ப சீரியஸா படிக்கிறாங்களாம்! ஆனா ஏதோ ஹிட்லர் ஆட்சியில இருக்குற மாதிரி யாரும் கருத்து சொல்ல வரலையாம்பா, அதனால!” என்று சொல்லி முடிப்பதற்க்குள்! அண்ணாச்சி தொடர்ந்தார் “இது பழைய செய்தி பாய்! இப்ப பாருங்க இன்னும் மூணுநாள் பதிவு இருக்கு இதை ரொம்ப நல்ல முறையில எழுதணும்ன்னு துடிக்கிறாராம் அந்த பதிவர்!” “அப்பிடியாபா” என்ற பாய் “இதே தான் நானும் சொல்ல வந்தேன்!” என்று முடித்தார் பாய்.

“இன்னிக்கி படச் சரம் தரலாம்ன்னு இருக்கார்ய்யா” என்று இன்றைய செய்திக்கு தாவினார் சாமி உடனே பாய் ஆரம்பித்தார் “ஆமாப்பா. இவரோட ஒரு பெரிய இரசிப்புக்கு பாத்திரமானவராம் அந்த பொற்கிழி ஆசாமி!”. அப்டீயா? அமாப்பா! இவர் படமெடுப்பது உபதொழிலாம் வாத்தியார் வேலைபார்த்தவராம்! இவரோட படங்கள் பார்த்து ஜுபீடர்ல எடுத்ததான்னு கேட்பாராம்? அவ்ளோ நேர்த்தியா படம் எடுப்பாராம்பா, ஆனா” என்ற பாய் சற்று நிறுத்த. “கருப்புவெள்ளை தானே!, அதான் தெரியுமே!” என்று சாமி முடித்தார்.

மீனாட்சி அம்மன் கோவில் பத்தி பல படங்கள் சேகரித்த போது இவர் பல பதிவுகள பார்ப்பாராம்! அட இப்படியெல்லாம் படமெடுக்க முடியுமான்னு யோசிப்பதுண்டாம்! உதாரணமா அந்த செயர்க்கைகோள் படம், நேர்கோட்டில் எடுக்கப்பட்ட படம், கம்பத்தடி மண்டபத்தோட வெயில் விழும் படம், கோபுரத்தின் பக்கவாட்டு வெட்டு தோற்றம்ன்னு பல படம் வலையேற்றம் செஞ்சாரோன்னோ! அதையெல்லாம் இவர் எடுத்தது பல நெனச்சாளாம், இல்ல இது எல்லாம் தன்னோட ஒரு மென்பொருளுக்காக சேகரித்ததுன்னு பலரிடம் சொல்லிருக்காராம்! உண்மையும் அதானாம்!” என்று முடித்தார் ஐயர்.

“இப்போ ஒரு பதிவர்பா இவரோட சில பதிவுல பல படம் காட்டுவார் அதுவும் வெளியூரா, வெளிநாடா காட்டுவார்! அந்த படம் பார்க்க ஒரு விதமா இருக்கும்!” என்று சொல்லுவதற்க்குள் “ஓ அந்த மூத்த பதிவர்தானே!” என்றார் சாமி “ஆமாப்பா அவரேதான்! மூத்த சகோதரின்னு எல்லாரும் கூப்புடுவாங்கோ, இவங்க படத்துல ஒரு தனிமகத்துவம் என்னன்னா இவங்க பட்டு தெரிஞ்சிகிட்டது தான் அதிகமாம். அப்பறம் புஸ்தகம் படிச்சு தான் தெரிஞ்சுகிட்டாங்களாம்” என்று முடிக்க

“அந்த மகரந்தமானவர் கூட பல படப்பதிவுகள் எழுதினார்ல, அதுலையும் ஒரு சில படம் இருக்கே. அதோட மாயாஜால கதையில வர்றத தனியா சொல்லனும்ய்யா” என்று முடித்தார் சாமி.

“ஒவ்வொரு பதிவுலையும் விதவிதமா அம்மன் படங்களை காட்டும் அந்த ஒரே ஊர்காரரோட பதிவு இருக்கே அதையும் கண்டிப்பா சொல்லுவார்!” என்று சாமி கலக்க சிரித்தபடி அடுத்த மேட்டருக்கு தாவினார் அண்ணாச்சி “இதுவும் ஒரு ஆன்மீகம பற்றிய ஒரு பதிவு தான், திருமலை திருவிழாவையும், திருவரங்க திருவிழாவையும்!, அந்த ஆனந்த சயணமா இருப்பவர் பதிச்சிருக்கார், இன்னொரு ஆனந்தமானவர் இட்ட ஒரு தொடர்ல மயிலை பங்குனிப் பெருவிழா படத்தொடர் குடுத்திருக்கார்!. இந்த ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை! ஒரு வேற்றுமை என்னன்னா. இரண்டும் திருவிழா சம்பதப்பட்டது, வேற்றுமை, ஒன்னு ஹரியோடது இன்னொன்னு சிவனோடது!” என்று முடித்தார் “அப்பிடிபாத்தாலும் ஒன்னு தானேபா!” என்றார் பாய்.

"படத்துக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து மாதம் ஒரு போட்டி நடறாங்களே அதை பற்றி எதாவது உண்டா?" என்று அண்ணா கேட்க. பாய் தலையாட்டி ஆமோதித்தார்.

"படமே இல்லாம படச்சரமா?" என்றபடி ஐயர் பெஞ்சை காலி செய்ய, எல்லோரும் சிரித்தபடி கலைந்தனர் சூழ்நிலை சமநிலையானது!
____________________________________________________________________________________
விமர்சனச்சரம்.

கேரளாவில் நடந்த முழூ அடைப்பை அடுத்து நம்ம டீக்கடை நாயரும் கடை திறக்கவில்லை ஆகவே பெஞ்ச் பெரியவர்கள் சந்தித்துக்கொள்ள முடியவில்லை! இருந்தாலும் கொஞ்சம் முயன்று பார்க்கிறேன்.

விமர்சனம் என்பது ஒருவரை இன்னொருவர் தாழ்த்தும் செயலல்ல அவரை அவரே சீர்படுத்திக்கொள்ள ஒரு சந்தர்ப்பம். இப்படியாக பல தங்களது பார்வையில் கண்டகாட்சிகள் விமர்சனமாக இணையத்தில் பதித்துள்ளனர் அவற்றை தொகுக்கும் சரம் இந்த விமர்சனச்சரம்.

குருவின்னு ஒரு படம் வந்தாலும் வந்தது பல பதிவர்கள் தங்கள் பங்கிற்க்கு விமர்சனம் எழுதி தள்ளினர்!

படம் வரும் முன்னரே இதன் கதை இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்று மின்னஞ்சல்கள் பறந்து கொண்டிருந்தது.

அப்பேற்ப்பட்ட எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இப்படம் வாருங்கள் நம்பதிவர்களின் விமர்சனத்தை பார்க்கலாம்!

கடைலயூரில், செல்வன் எழுதுறார், படம் பரவாயில்லை என்று சான்றளித்த செல்வன் கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்திருந்தார்.
TBCD அவர்கள் சற்றே ஒரு படி மேலே போய் ஒவ்வொரு தலைப்பாக ஆராய்கிறார் மொத்தத்தில் சரியில்லையாம் .

“குருவி பார்த்து யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம்.” என்று இங்கே எழுதினார் இரவிசங்கர்.

நெல்லை செய்திகளில் இரசிகர்களுக்குகாக எடுக்கப்பட்ட படம் என்று தெள்ளதெளிவாக சொல்லிவிட்டனர்.
அதோட சில வேறு மொழி படம்
வஜ்ரா சங்கர் அருமையாக அரசியலையும் அறிவியலையும் ஆராய்பவர் இவர் எழுதிய மனிதவெடிகுண்டு என்ற இரண்டு ஆங்கில பட விமர்சனம்
“சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அமேரிக்க குடியுருப்புப் பகுதியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை பற்றி துப்பறியச் சென்று, அங்கு அவர்கள் ஆளாகும் பிரச்சனைகள் பற்றிய படம்….ஆறுதலான நல்ல விஷயம், படத்தில் பேசப்படும் அரபு dialect பாலஸ்தீன அரபு மொழி. அது சற்றே ஹீப்ரூவை ஒத்திருக்கிறது.”

எனக்கேன் வம்பு படம் பார்த்தவங்க தான் சொல்லனும்! நானே படம் பார்க்குறத விட்டு (ஒன்னு ரெண்டு மூணூ நாலு அங்ங்ங்ங்ங்) அஞ்சு வருசமாச்சு.

இப்ப தொடர் பற்றிய விமர்சனம் அண்ணன் குமரன் ஒரு தொடர் பதித்தார்! சூப்பராக வந்த தொடர், சும்மாவா ஆண்மீக சூப்பர்ஸ்டார்ல! புல்லாகி பூண்டாகின்னு பேரு. கதை படிக்க ஆரம்பித்தால் விட மனசு வராது அதை பற்றி ஒரு சிலர் விமர்சனம் எழுதினர் முதலில் பாலஜி

“தல வரலாறு (தலயோட வரலாறு படம் இல்லைங்க) கதையா மாறிடுமோனு ஒரு பயத்துல கூட இதை செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. ஆனா இந்த மாதிரி கதைகள்ல வாசகர்களுக்கு ஆயிரம் கதை கேட்டாலும் அலுக்காது என்றே தோன்றுகிறது. கோவிலை இன்னும் பொறுமையாக சுற்றி காண்பித்திருக்கலாம்.”

இப்பிடி இன்னும் நிறைய எழுதியுள்ளார்.

அப்பறம் நம்ம ஜீவ்ஸ், யோகன் ஐயா, திரு. ஜீவா - காலத்தின் (கோவி.கண்ணனின்) கடைக்கண் பார்வை: ரொம்பவே வித்யாசமாக மேலும் அருமையாக இருந்தது அதில் ஒரு துளி இங்கே.
“அதுவும் நீங்கள் எடுத்துக் கொண்ட 'சப்ஜெக்ட்' மனம் போன போக்கில், நினைக்கும் எதையும் கற்பனையில் எழுதும் செய்தி இல்லை. சில ஆன்மீகச் செய்திகளைச் சுவைபடச் சொல்வதற்காக எடுத்துக் கொண்ட உருவம் கதையாக நேரிட்டதால், இயல்பாகவே அப்படிப்பட்ட கதைகள் எழுதுவதில் ஏற்படும் சில சங்கடங்களை நீங்களும் எதிர்கொள்ள நேரிட்டது….கதையை நீங்கள் முடித்த பாங்கும் மிகுந்த நிறைவேற்படுத்தியது.”

மேலும் பலர் எழுதிய விமர்சனம் இங்கே.

அப்பறம் சில கே.ஆர்.எஸ். எழுதிய நையாண்டி பதிவுகள், நகைச்சுவையாக ஆரம்பித்து ஒரு பல பெரிய உண்மைகளை சொன்ன பொகவத் கீதை, கைப்புள்ளவை தலையானந்தாவாக்கிய சங்கத்து செய்தி, ஆன்மீக பதிவர்களை ஒரு கணம் நரகத்தில் தள்ளிய பதிவு இப்படி ஒரு பல பதிவுகள் இன்றும் படித்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.

ஜோதிடத்திற்க்கு தமது பதிவுகளை அற்பணித்துக் கொண்ட ஐயா சுப்பையா வாத்தியார் அவர்களின் பதிவுகள் நிச்சயமாக இந்த வாரம் எனக்கு எத்தனை தர்மசங்கடம் வந்திருக்கும் என்று கணிக்க கற்று தந்துவிடும். இவர் எழுதிய சனீஸ்வரன் படித்த பள்ளிக்கூடம் யாரும் அறியாத செய்தியாக இருக்கவேண்டும். பரல்களை எண்ணி வாழ்வை கணிக்க கற்றுத்தரும் இந்த தொடர்கள் எல்லாம் என்றும் இனிப்பவை.

(ஒருவேளை இந்த பதிவுக்கு என்றும் இனிப்பவை சரம்ன்னு பெயர் வைத்திருக்கலாமோ!)

நாளை டீக்கடை திறக்கும், அண்ணாச்சி மற்றும் குழுவினர் வருவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சகல செய்திகளை அறிந்து வைத்துகொள்ளும் அனைத்து சகலகலா வித்தகர்கள் அனைவருக்கும் இச்சரம் சமர்பணம்.

No comments: