Thursday, December 14, 2006

குறும்பு

என்னுடைய பள்ளிவயதில் ஒரு சம்பவம். நான் படித்தது தெப்பகுளம் வ்யூவான (அதாங்க குதுப்வ்யூ, மதுரை டவர் வ்யூ மாதிரி, தெப்பக்குளம் வ்யூ) தியாகராஜர் நன்முறை மேல்நிலை பள்ளியில். மேல்நிலை பள்ளியின் முதல் வகுப்பான ஆறாம் வகுப்பில் சேரும்போது அது அதைவிட மேலாக என்னுடைய வக்குப்பறை அத்தெப்பகுளத்தை பார்த்து ரசிக்கும் வகையில் கொண்ட சில வகுப்பறைகளில் இரண்டு வகுப்பறைகள் ஆறாம் வகுப்பிற்க்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வகுப்பில் யாரேனும் ஆசிரியர் வரவில்லையெனில் வகுப்பு தலைவன் முன்னால் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொள்வான், யாரும் பேசக்கூடாது, பேசினால் நம்முடைய பெயரை கரும்பலகையில் எழுதி வகுப்பாசிரியரிடம் காண்பித்து நம்முடைய "கிரேஸை" குறைப்பான் அல்லது "அ(இ)டி" வாங்கி தருவான். சில சமயம் வகுப்பாசிரியர் நல்ல மனநிலையில் இருந்தால் தப்பித்தோம், இல்லை தொலைந்தோம்.

எல்லாம் நமக்குன்னே வந்து சேரும் என்று அடிக்கடி வடிவேலு சொல்வாரே அது போல அவ்வருட நமது அறிவியல் ஆசிரியைக்கு ஏதோ நோய் வந்து பல நாட்கள் ஓய்வுவிடுப்பில் இருந்தார். காலாண்டு பரிட்ச்சைக்கு பிறகு வரவேயில்லை. வேறு ஒருவரை அரையாண்டு பரிட்ச்சைக்கு ஒரு வாரத்திற்க்கு முன் கூடுதலாக பணியமர்த்தினர்.

அதுவரை சுமார் இரண்டு மாதம் குறும்புகளுக்கு பஞ்சமில்லை, புக் கிரிக்கெட் விளையாட்டு, சினிமா அந்தாக்ஷரி என்று உட்கார்ந்தபடி விளையாடப்படும் புதுப் புது விளையாட்டுக்கள் நடந்தது, நடந்தது, நடந்துகொண்டே இருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் பசங்க சமத்தா இருக்காங்க என்று சொல்ல தோன்றும். ஒரு சில பெயர்களை அவ்வப்போது தலைவர் பலகையில் எழுதுவதால் (யாருப்பா அது என் பெயர் இருந்திச்சான்னு கேட்பது) அவ்வளவாக சத்தம் வருவதில்லை. அமைதியாகவே "அமர்ந்திருப்போம்". குறும்பு என்னமோ ஓடிக்கொண்டிருக்கும்.

விளையாட்டுக்காக ஒரு சிறிய நோட்டு புத்தகம் போட்டு ரஜினி படம் எல்லாம் எழுதிவைத்து அதை விளையாடும் போது பயன்படுத்துவது (அதாங்க சினிமா அந்தாக்ஷரி). ஒரு நடிகரின் படமா சொல்லிட்டே போகனும், அவன்(ர்) சொல்ல, இவன்(ர்) சொல்ல என்று என்னோட முறை வரும் போது ஒரு பக்கம் முடிந்து விடும். பக்கத்தை திருப்புவதற்க்குள் ரெஃபரி டைம் அவுட் என்பான். கடுப்பாகிவிடுவேன். இவ்வளவு உழைத்தும் விணானதே என்று நினைப்பேன்.

பிறகு, ஆங்கில வார்த்தைகளை கொண்டு அந்தாக்ஷரி செய்யவேண்டும் என்று நன்பர்கள் கேட்க விளையாட ஆரம்பித்தோம். சிறிய வார்த்தை கூட சில நேரங்களில் வராது. சொன்ன வார்த்தைகளை சொல்ல கூடாது என்று ஏகத்திற்க்கு கும்மாளம் தான்.

ஆனால் அந்த இருமாதத்தில் சில வகுப்புகள் பிற ஆசிரியைகளால் களவாடப்பட்டு சமூக அறிவியல் பரிட்ச்சையோ, வகுப்பாசிரியரின் சிறப்பு வகுப்போ, விளையாட்டு அல்லாத ஏதாவது ஒரு வகுப்பு ஓடும் அப்போதெல்லாம் குறும்பு "வாலை" பின்னி பினைத்து அமர்ந்து ஆதரவு கொடுப்பர் நம் ஆருயிர் சகாக்கள்.

சில வார்த்தை விளையாட்டுக்கள் அல்லது வார்த்தை கச்சேரி, உள் விளையாட்டறங்க விளையாட்டல்லாத அமர்ந்து ஆடும் விளையாட்டுக்கள் என்று நன்றாக இருந்தது அந்த "கனாகாலம்".

சிறு வயது பையனிடம் சிலவற்றை எதிர்பார்க்க முடியாது அதில் முதன்மையானது உண்மை – ஏதாவது இல்லை என்றால் தொலைந்து விட்டது என்று பதில் (நீயும் தொலைய வேண்டிய தானே). ஏதாவது பரிட்சை மார்க் குறைந்தால் மறந்து விட்டேன் என்று பதில் வரும் (அப்படியே ஞாபகம் இருந்துட்டாலும் வெட்டி முறிச்சிரப் போற) அல்லது வினாதாள் சரியில்லை (என்னிக்கு நீ சரியா இருந்திருக்க?) என்று பதில் வரும் இப்படி தான் போகுமே தவிர உண்மை வருமா என்றால் சொற்பமே.

ஏன் தான் இப்படி பொய் சொல்றோமோன்னு நாமே காரணம் தெரிந்து கொள்வதற்க்குள் ஓஷோ சொன்னது போல் "நீ உன் தந்தையை மதிக்க கற்பதற்க்குள், உன்னை மதிக்காத ஒரு ஜீவன் இவ்வுலகில் வந்து விடுகிறான்". என்ற உண்மையான வாசகம் நினைவில் ஆழ்த்தும். இது போல் பிரச்சனைகளல்லாத பலவற்றை செய்து விட்டு திரும்பி பார்க்கும் சமயம் (ஆனந்த) கண்ணிர் வரவழைக்கும் செயல் தான் குறும்பு :).
_/\_ நன்றி.

No comments: