Saturday, April 02, 2011

முன்னோர் மொழி

எண்ணெய் உள்ள வரை தீபம்
வினை உள்ள வரை தேகம்

கோபத்திற்க்கு மிஞ்சின பாபமில்லை
சாந்தத்திற்க்கு மிஞ்சின ஞானமில்லை

தன்னலமுற்றவனுக்கு (அவ்)உலகம் சொந்தம்
தன்னலமுள்ளவனுக்கு நரகம் சொந்தம்

சுத்தத்திற்க்கு மிஞ்சின செல்வமில்லை
சோம்பலுக்கு மிஞ்சின தரித்திரமில்லை

பொறாமைக்காரனை விட்டு வறுமை நீங்காது
பொறுமைக்காரனை விட்டு பெருமை நீங்காது

பெண்ணுக்கு கற்புக்கு மிஞ்சின ஆபரணமில்லை
அறிவு மலரட்டும் ஆசை சுருங்கட்டும்

கடவுள் எல்லாரிடமும் இருக்கிறார்
ஆனால் எல்லாரும் கடவுளிடத்தில் இல்லை

No comments: