Friday, January 08, 2010

சோளக்காட்டு பொம்மை - 2

முருகா ஏனப்பா உனக்கு என் மீது விரோதமா
அல்லது பறவைகள் மீது பரிதாபமா?

-நானோ விவசாயின் -நண்பன்
புழுவுக்கு அடுத்த படியாய்,

அப்போது தான் அவன் உனக்கு
படியளப்பான் படிப்படியாய்

பறவைகளை உன்னவிடுவதில்லை
என குற்றம் சாட்டுகிறாயே !
அறுவடையான நெல்லை
நான்
காவல் காப்பதில்லையே !
அது உனக்கு விளங்கவில்லையே!

ஆரம்பத்தில் சிதறிகிடப்பதை இந்த
சின்ன சிறகுகள் உண்டுவிட்டால்
கதறிகிடக்கும் அதன் குஞ்சுகளும்
அதனோடு உன் பிஞ்சுகளும் !

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in