Monday, July 24, 2006

சனிப்பிரதோஷம்

இன்று ஆடி அமாவாசை



சிவ சங்கரன், நாராயணனின் பக்தனாக, தொண்டனாக, தூதனாக இருந்து, இன்றும் அவர் புகழ் பாடி வரும் ராம பக்தன், ருத்ர அவதார அனுமான். இவரை பற்றி நான் பல பதிவுகளில் சொல்லி இருந்தாலும் மேலும் சில கருத்துக்கள் இங்கே.

சிவன் ஊர்வனவாக(பாம்பாக), மிருகமாக(பன்றியாக),கோபங்கொண்ட மனிதனாக(வீரபத்திரர்), மதியூக மானிடனாக(விறகு விற்று, வளையவிற்று, மானிக்கம் விற்று), செய்த திருவிளையாடல்கள் பலப்பல, இவரே வானரமாக அவதரித்த திருவிளையாடல் தான் அனுமான் என்று விளங்கும் வானவீரன் பஜ்ரங்க பலி.




ரகுகுல நந்தன் இராமர், இலங்கேஸ்வரன் இராவணனை வதம் செய்ய பல தேவர்கள் துணை புரிந்தனர், சூரிய பகவான் சுக்ரீவனாக, இந்திரன் அங்கதனாக(வாலி மைந்தன்) என்று எல்லா தேவலோகத்தவரும் இணைந்து இராமனை நடுநாயகமாக, கதையின் நாயகனாக கொண்டு இயற்றப்பட்ட நாடகம் தான் இராமாயணம்.

அதில் முக்கிய அம்சமாக பல இடங்களில் கதாநாயகனையே விஞ்சும் அளவிற்க்கு அற்புதங்கள் செய்த, பாரதத்தின் முதல் வெற்றி வீரனாக, ஆகாய சூரனாக, வானரவீரனாக, வாயுபுத்திரனாக, கேஸரி நந்தனாக, அஞ்சலி புத்திரன் ஆஞ்சநேயன், அனுமனாக இறைவன் சிவசங்கரன் அவதரித்தது இந்த அவனியிலே. இவரையும் அனைத்து தேவர்களும் தங்களால் இயன்ற வரமளித்து இவரை மேலும் வலிமையடைய செய்தனர். ‘பிரமதேவர்’ ‘பிரம்மாஸ்த்திரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றும் குபேரன் வலிமையுள்ள கதாயுதத்தை வழங்கியும், இந்திரன் வஜ்ராயுதத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பல தேவர்கள் இவருக்கு வரமளித்தனர்.

அனுமனுக்கு சிறு வயதில் பாடம் சொல்லி தந்தவர், சூரிய பகவான், இதன் மூலம் தமது இராம கடமையை இருபங்கு அதிகமாக செய்தவராகிறார். மேலும் ‘சொல்லின் செல்வரான’ ஆஞ்சனேயர் எல்லா கலைகளிலும், எல்லா மொழிகளிலும் தேர்ச்சி பேற்றவர், துளசிதாசரிடம் இந்தி மொழியில் இராமயணத்தை இயற்ற சொல்லும் போது, மக்களுக்கு விரைவில் புரியும் வண்ணம் ‘தோஹா’ என்ற குறள் வடிவில் இயற்றும் படி வேண்டுகிறார். அதே போல் அவரும் இயற்றும் சமயம் முதலில் சம்ஸ்கிருதத்தில் 10 குறளடிகளை துதிக்களாக பாட, அனுமன் அவசரப்பட்டு என்ன “நீங்களும் சமஸ்கிருதத்தில்?” என்று கேட்க அதுவும் “அனுமான் உவாச” என்று அதில் வரும், பின் இந்தியில் “தோஹா” வடிவில் இராமாயணத்தை இயற்ற எல்லாம் சுபமாக முடிந்தது. அக்காவியம் இன்றும் அழியாக் காவியமாக, “துளசிதாஸ் ராமாயண்” என்று பல இடங்களில் போற்றி பேசப்பட்டு வருகிறது.

மஹா விஷ்ணுவின் அவதாரமான இராமருக்கு கூட இல்லாத விஸ்வரூப தரிசனம் அவரது பக்தனுக்கு இருப்பது மேலும் பெருமை சேர்ப்பது.

சங்கரனை நிந்தித்த பாவமும், நாரயணனை நிந்தித்த பாவமும் தீரமுடியாத பாவங்களாக உள்ளன. அத்தகைய பாவங்களுக்கு ஆளானப்பட்டவர்கள் செய்யவேண்டிய பரிகாரம் / விரதம் “சபரிமலை யாத்திரை”.
இவ்விரதம் ஹரி-ஹர இருவரின் அம்சகளாக ஆரியங்காவு அய்யனான, தர்ம சாஸ்தா இருப்பதால், இருவரையும் நிந்தித்த பாவம் இவரை வழிபடுவதாலும், சபரிமலை யாத்திரை செய்வதாலும் அப்பாவங்கள் தீரும் என்று உணர்த்தப்பட்ட விரதம் சபரிமலை விரதம்.

Saturday, July 22, 2006

இன்று சனிப்பிரதோஷம்

இன்று சனிப்பிரதோஷம்




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

என்ற திருவள்ளுவரும்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

என்றும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

என்று தெய்வத்தின் பெருமையை கூறி தாமும் கடவுளை வணங்குபவர்களுள் ஒருவராக சொல்லியுள்ளார். கடவுள் என்றால் யார்? அவர் எங்குள்ளார்?, என்று எவரேனும் கேட்டு விடக்கூடாது என்பதால் பலவிதமான் கோவில்கள், பலவிதமான தெய்வங்கள் என்று ஆங்காங்கே கோயில் கொண்டு அருள் செய்து வருகின்றனர். மேலும் நடமாடும் தெய்வங்களாக அவர்கள் பெற்றோர்கள் என்ற ஸ்தானத்தில் இருந்து வருகின்றனர். தெய்வங்கள் எங்கே இருந்தாலும், எப்படி தொழப்பட்டாலும் சஹஸ்ரநாமத்தில் சொல்லியுள்ளபடி

“கரோமி யத் யத் சகலம் ப்ரஹஸ்மை நாரயணயாதி சமர்பயாமி”

என்று எல்லா நைவேத்தியங்களும், ஆஹுதி பொருட்களும் பரபிரம்மமான நாராயணனையே சென்று அடைகிறது.

ஈசனும் எப்போதும் “ராமா” என்ற துவிஅக்ஷரங்களை (இரண்டெழுத்தை) ஜபித்தபடி தியனிப்பவர் என்று சிவபுராணம் சொல்கிறது. ஈசனை ஜபிப்பவர்கள் கைலாச வாசம் பெற்று ஈசனிடம் “ராமா” நாம உபதேசம் பெருகின்றனர் என்று சித்தர்களும், ரிஷி முனிகளும் சொல்லியுள்ளனர்.

நாராயணனின் பாத கமலத்தில் இருந்த கங்கையை தன் தலை மேல் சூடியதால் ஈசனை கங்கைகொண்டான், என்று பெயர் பெறசெய்தவர் எட்டெழுத்துகுரிய பெருமான் நாராயணன், தன்னை வணங்குபவர்களை நாராயணன் வைகுண்ட வாசமளித்து அவர்களுக்கு “சிவ” ஈரெழுத்து மந்திர தீக்ஷை அளித்து ஆட்கொள்கிறார் என்று “தேவி பாகவதம்” சொல்கிறது. இப்படி ஒருவரை ஒருவர் மதித்து வாழவேண்டும் என்று இவர்கள் இருவருமே உதாரணமாக இருந்து வருவது யுக யுகமாக தொடர்கிறது.

மேலும் ஒருவரை ஒருவர் தொண்டு செய்து வாழ்ந்த திருவிளையாடல்களும் அரங்கேறியுள்ளன, ஈசனின் தொண்டனாக, ஈசனே கண்கண்ட தெய்வம் என்பதை உலகம் மூழூவதும் அறிவிக்க நாராயணன் எடுத்த அவதாரம், ஜமதக்னி-ரேணுகா தேவிக்கு பிறந்த “பரசுராமர்”. சிவதொண்டே இவரது தாரக மந்திரமாக இருந்து வந்துள்ளது. குமரி முதல் இமயம் வரை அவர் ஸ்தாபித்த கோவில்கள் ஏராளம். தான் பிறந்தது முதல் எல்லா நாட்களும் பகவான் ஈசனே தெய்வம் என்று சொல்லி வந்துள்ளார், அதற்க்கு உதாரணமாகவும் இருந்து வந்து தன் பெற்றோரையே சிவ-பார்வதியாக எண்ணி வணங்கி வந்தார், தன் தந்தையின் உத்தரவிற்க்கு பணிந்து, தன் பரசு (கோடாலி) என்ற ஆயுதத்தால் தன்னை பெற்ற தாயின்சிரத்தையே கொய்தவர் பின் அதே செயலால் இன்று உலகம் முழூவதும் மழையின் தெய்வமாக கருதப்படும் “மாரியை” தன் திருவிளையாடலால் உலகிற்க்கு தந்தவர் ஜமதக்னி என்ற அந்த சங்கரனார்.

அதே போல் சிவன் நாராயனின் பக்தனாக, தொண்டனாக, நாராயணனே தெய்வம் என்று புகழ்பாடும் அவதாரமாக பிறந்தார் அவரை அடுத்த பதிவில்.

Thursday, July 13, 2006

202: புது மண்டப படங்கள்

மீனாட்சி அம்மன் கோவிலருகில் பல மண்டபங்களும் பல கோவில்களும் இருந்து வருகின்றன. அதில் மிக பழமையும் பெருமையும் வாய்ந்தது புது மண்டபம். இந்த மண்டபம் மயன-மனையடி சாஸ்த்திரபடி கட்டப்பட்ட மண்டபங்களுள் ஒரு முக்கிய மண்டபம். இதில் இருபதுக்கும் மேற்ப்பட்ட இறைவனின் திருஉருவ சிலைகள் இருக்கின்றன.







இம்மண்டபம் கட்டிமுடிக்கப்பட்டவுடன் சிலைகளின் கண்கள் சாஸ்த்திர சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. அப்போது இம்மண்டபம் தேவலோகத்தை நோக்கி எழும்ப ஆரம்பித்தது, என்ன செய்வது என்று விரைந்து கணித்த வல்லுநர்கள் உடனடியாக ஒரு குதிரையின் கால் குளம்பில் ஒரு உளியால் தட்ட அம்மண்டபம் அங்கேயே நின்று விட்டது. இன்றும் சிலைகள் கொண்ட மண்டபம் சற்று உயர்ந்தும், மற்ற வெளிசுற்றுகள் தாழ்ந்தும் இருப்பதை காணலாம்.

ஆவணி மாத திருவிழாவில் அம்மையும் அப்பனும் இம்மண்டபத்தில் எழுந்தருளி இம்மண்டபத்திற்க்கு மேலும் பெருமை சேர்க்கின்றனர்.

திருமலை நாயக்க மன்னரின் மேற்பார்வையில் கட்டபட்ட மண்டபங்களுள் முதன்மை வாய்ந்த மண்டபம், முதல் முதலில் மாசி திருவிழா சித்திரை திருவிழாவுடன் இணைக்கப்பட்ட போது இம்மண்டபத்தில் திருக்கல்யண விருந்து நடந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.





தற்சமயம் இம்மண்டபம் சிறுசிறு தையல் கலைஞர்களும், சிறு வியாபாரிகளின் தொழில் கூட்டுமைப்பாகவும் இருந்து வருகிறது. மேலும் திருவிழாகாலங்களில் குறிப்பிட்ட நேரங்களில் இக்கடைகள் அடைத்து இறைவாழிபாடு செய்கின்றனர்.

புத்தக கடைகளுக்கும், பட்டு நூல்கள், பல தினுசுகளில் வரும் புதிய மற்றும் பழைய வகை உடை அலங்கார பொருட்களுக்கும் பேர் போன புதுமண்டபம் கடைகள் இன்றும் காலத்தால் அழியாத இடமாக உள்ளது.

இது நிகழ்வுகள் பதிவின் ஐம்பதாவது பதிவு.

Monday, July 10, 2006

201: Baraha - பரஹா எழுத்துரு செயலி


Baraha - பரஹா எழுத்துரு செயலி.

இவ்வளவு வேகமாக பல பதிவுகளை இட காரணங்களை ஆராய்ந்த போது அதை பட்டியலிட்டேன்,

1. அங்கையர்கன்னியின் அருள்
2. வேங்கடவனின் திருவருள்
3. ஊக்கமளித்த உங்களை போன்றவர்கள், மேலும் பல நன்பர்கள்.
4. பரஹாவின் எழுத்துருச்செயலி (அதிலும் எனக்கு பிடித்தது Ver 6.0)
5. கூகுள் ஆண்டவர் (சில கடின சொற்களுக்கு இவர் தான் எனக்கு வழிகாட்டி)
6. படங்கள் அளித்த நன்பர்கள் பலர்.

பரஹாவின் எழுத்துரு செயலி பற்றி இப்பதிவில் இடுகிறேன்.

பரஹாவில் பல வசதிகள் அதிலும் ஒரு அதிசயம் என்னவென்றால் அதை பலருக்கு நாமே பரிந்துரைக்கலாம், பயன்படுத்த சொல்லி அனுப்பலாம். copy rights எல்லாம் அவர்களுக்கே என்றாலும் அதை பிறருக்கு அனுப்பலாம்.

மற்ற செயலிகளை விட இதில் என்ன விஷேசம் என்று கேட்டால் இந்த செயலியை நிறுவும் போதே மற்ற இந்திய மொழிகளான

1. கன்னடம்
2. மலையாளம்
3. தெலுங்கு
4. மராட்டி
5. குஜராத்தி
6. பஞ்சாபி
7. பெங்காலி
8. சமஸ்கிருதம்

அதுவும் தாமாக நிறுவிகொண்டு விடும், நமக்கு தேவையான சமயத்தில்
தேவையான மொழியை தேர்வு செய்து தட்டச்சு செய்யலாம். மேலும் தமிழ் மொழியின் எண்கள் இதில் ஒரு சிறப்பம்சமாகும், தமிழில் வரும் வடமொழிகாளான ஸ,ஷ,ஸ்ரீ,ஜ போன்ற எழுத்துகளும் இதில் இடம் பெற்றுள்ளது,

மேலும் இதில் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பெரிதும் பயன்படுகிறது, உதாரணமாக நேற்றைய குருவை தியானிப்பாய் என்ற பதிவிலும், சௌராஷ்ட்ரா திருக்குறள் பதிவிலும், பாடலையும், குறள்களையும் மொழிமாற்றம்(Translit) செய்ய இந்த பரஹா மொழி மற்று மென்பொருளே (Baraha Conversion Utility) பெரிதும் உதவிவருகிறாது.

பரஹா மென்பொருளை தயரித்த மென்பொருள் குழுவிற்க்கும், அதை அங்கீகாரம் செய்த பரஹா நிறுவனத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றியை இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல மொழிகளை தம் மென்பொருளில் இணைத்து, ஒரு முழூ இந்திய மொழி செயலியாக மாற, என்னை நன்றாக படைத்த அந்த "ஏழுமலை வாசனான" வேங்கடவனையும், "அவர்தம் தங்கையான" அங்கயர்கன்னியை வேண்டியும், வணங்கியும் மகிழ்கிறேன்.

Friday, July 07, 2006

192: யார் இவர்?


யார் இவர்?

தமிழக பட்டிமண்டப பேச்சுகளுக்கு பெயர் போன ஒரு பேச்சளர், தன் பேச்சால் எதிர் பேச்சாளர்களை திக்குமுக்காட வைப்பதில் வல்லவர். இவருடைய வர்ணைனைகளை கேட்ப்போரும் தம் கண்களால் பார்க்கும் அதிசயத்தை தர வைப்பவர்.
இவர் யார்? கிட்டதட்ட 10 ஆண்டுகல் பழைய புகைபடம் இது கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

ஒரு க்ளு,
சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமண்டப குளுவில் இருப்பவர், மதுரை தமிழாசிரியர்.

(சமீபத்தில்கிடைத்த இப்படம் இப்பதிவில் இடுகிறேன்.)